தனித்தலையும் செம்போத்து

தனித்தலையும் செம்போத்து, செந்தி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 65ரூ. வடிகாலற்ற காமத்தை உணர்த்தும் கவிதைகள் செந்தியின் தனித்தலையும் செம்போத்து தொகுப்பு நகரமயமாதல் என்னும் விஷயத்தைத் தவிர வேறெந்த அரசியலுக்கும் முக்கியத்துவமளிக்காமல் அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டது. தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றில் மட்டும் இவை வெளிப்படுவதைக் காணமுடிகிறது. உதாரணமாக செங்குளத்தை இரண்டாகப் பிரித்து வளர்ந்துகொண்டே போகும் தங்க நாற்கரச்சாலை குட்டைகள் அரிதான வெளியில் கான்கிரீட் பாத்திகள் அவைகளுக்குப் பெரும் களிப்பூட்டியிருக்கால் என்ற கான்கிரீட் பாத்தி நீர் குடிக்கவரும் காக்கைகள் கவிதையைச் சொல்லலாம். தொகுப்பில் ஆண்களின் வடிகாலற்ற […]

Read more

மிளிர் கல்

மிளிர் கல், இரா. முருகவேள், பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர், விலை 200ரூ. ரத்தினக் கற்கள் தேடும் நீலகண்டப் பறவை நாகரிகச் சமூகங்கள் நாதங்கள் வேரைத் தேடுகின்றன. அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்கின்றன. வரலாற்றில் புதையுண்ட தங்களின் பண்பாட்டு விழுமியங்கள் குறித்துக் கரிசனம் கெள்கின்றன. சிலம்பு தமிழின் தொன்மை அடையாளம், கண்ணகியும்தான். கண்ணகியின் காற்சிலம்பிலிருந்த மாணிக்கப் பரல்கள் பண்டைத் தமிழகத்தின் ஒப்பற்ற விளைச்சல், பெரு வணிகப் பண்டம். மாணிக்கம், மரகதம், கோமேதகம் என்றெல்லாம் ரத்தினக் கற்கள் சுட்டப்படுகின்றன. இவை புறநானூறு போன்ற செவ்விலக்கியங்களில் மிளிர மணிகள் எனப்படுகின்றன. […]

Read more

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம், ஜேனஸ் கோச்சார்க், தமிழில் – தி.தனபால், பாரதி புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை, விலை 40ரூ. குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக்கின் கருத்துகளின் தொகுப்பே ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் என்னும் நூல். இந்நூலை தி. தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங்களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர்பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது. இருபத்தியொரு தலைப்புகளின் கீழ், குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை […]

Read more

மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள்

மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை 12, விலை 90ரூ. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு மன்னர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அவர் எந்தெந்த மன்னர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்? அந்தக் கடிதங்களை யார் கொண்டு சென்றார்கள்? அவற்றுக்கு அந்த மன்னர்களின் எதிர்வினைகள் எப்படி இருந்தன என்பதை நாடகவடிவில் மவுலவி கே.ஜே. மஸ்தான் அலீ பாக்கவி எழுதிய நூல். நாடக வடிவில் எழுதப்பட்டிருப்பதால் விறுவிறுப்பாகவும், படிப்பதற்கு சுவையாகவும் இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.   —- தாயெனும், […]

Read more

நாடறிந்தோர் வாழ்வில்

நாடறிந்தோர் வாழ்வில், சீதைப் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைக் கூறும் நூல். இதற்கு முன் இதுபோன்ற நூல்கள் வந்திருக்கின்றன. அவை உரைநடையில் எழுதப்பட்டவை. கவிவேந்தர் கா. வேழவேந்தன் இந்த நூலை மரபுக் கவிதை வடிவில் எழுதியுள்ளார். எல்லோரும் எளிதில் புரிந்துகொண்டு ரசிக்கும்படியாகவும், அதே சமயத்தில் இலக்கியச் சிறப்புடனும் கவிதைகளை எழுதியிருப்பது கவிஞரின் ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றன. மகாத்மா காந்தி, நேரு, சாக்ரடீஸ், பெரியார், அண்ணா, பாரதியார், கலைஞர் கருணாநிதி, பாரதிதாசன், கண்ணதாசன் உள்பட 50 தலைவர்கள், சாதனையாளர்கள் […]

Read more

முப்பெரும் புராணங்கள்

முப்பெரும் புராணங்கள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 175ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-060-1.html சிவபுராணம், விநாயகர் புராணம், கந்த புராணம் ஆகிய புராணங்களின் தொகுப்பு நூல். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த சிவபெருமான் புரிந்த திருவிளையாடல் ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் உண்டு. பக்தியுடன் பூஜிப்பவருக்கு எல்லா நற்குணங்களையும் வழங்கும் சிவனின் திருவிளையாடல்கள் பலவற்றின் தொகுப்பே சிவபுராணம். விநாயக புராணத்தில் விநாயகருடைய பிறப்பு, பூஜிக்க வேண்டிய முறைகள், மந்திரங்கள், அன்றாட வாழ்க்கையில் கையாள வேண்டிய முறைகள் பற்றிய செய்திகள் […]

Read more

விழித்திரு விடியல் விருது கொடுக்கும்

விழித்திரு விடியல் விருது கொடுக்கும், மணிமகலைப் பிரசுரம், சென்னை, விலை 60ரூ. இந்த கவிதை நூலின் ஆசிரியரான இளம் பெண் கவிஞர் மதுரா, வறுமையுடன் போராடி, எதிர் நீச்சல் போட்டு, வேலை பார்த்துக் கொண்டே எம்.ஏ படித்துத் தேறியவர். அனுபவம் காரணமாகவும், நிறைய படித்ததன் காரணமாகவும் கருத்தாழம் மிக்கக் கவிதைகளை எல்லோருடைய நெஞ்சிலும் கொஞ்சி விளையாடும் வண்ணம் படைத்துள்ளார். சிறகு விரித்து விட்டேன், சிகரம் தொடுவதற்கு என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார் கவிஞர். நிச்சயம் சிகரத்தைத் தொடுவார் என்ற நம்பிக்கையை, அதில் உள்ள கவிதைகள் […]

Read more

நல்லதாக நாலு வார்த்தை

நல்லதாக நாலு வார்த்தை, ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 115ரூ. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன், மனிதர்களைப் புரிந்துக் கொள்ளவும், வாழ்க்கையை வெற்றி கொள்ளும் வகையில் உறவு, மனம், பழக்கம், திறன், நேரம் ஆகிய 5 சிறுதலைப்புகளில் 27 கட்டுரைகளை படங்களுடன் தொகுத்துள்ளார். எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.   —- சிம்மாசன சீக்ரெட், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. இதுவரையில் 40 நூல்களை எழுதியுள்ள சிறந்த […]

Read more

தமிழ் எழுத்து

தமிழ் எழுத்து, மீள்பார்வை+சீர்திருத்தம்=தமிழி 2014, சாரதா பதிப்பகம், சென்னை 101, விலை 80ரூ. தமிழர்கள் காலந்தோறும் வரிவடிவம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். மொழியைக் கற்றுக்கொள்ள எளிதாக இருக்கும். கற்பிக்கவும் எழுதுவதற்கும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பலப் பல மாற்றங்களைச் செய்துகொண்டே வந்தனர். நவீன காலத்தில் அவை எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் பரிந்துரைக்கப்பட்டது. தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்காக நாம் எடுத்துக்கொண்ட காலம் அதிகம். அதே வரிசையில் இந்நூல் ஆசிரியர் 247 ஒலிகளையும் வெறும் 24 […]

Read more

மருதகாசி திரையிசைப் பாடல்கள்

மருதகாசி திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-177-6.html தமிழ்த்திரை உலகில் கவியரசு கண்ணதாசனுக்கு முன்பே தடம் பதித்து பாடல்கள் எழுதியவர் மருதகாசி. சுமார் 250 படங்களுக்கு 4 ஆயிரம் பாடல்கள் எழுதியவர். அவருடைய பாடல்கள், புத்தகங்களாக தொகுப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இது மூன்றாவது புத்தகம். இதில் மொத்தம் 190 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோருக்காக எழுதப்பட்ட பல […]

Read more
1 2 3 4 9