நக்சல்பாரி முன்பும் பின்பும்

நக்சல்பாரி முன்பும் பின்பும், சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன், விடியல் பதிப்பகம், கோயமுத்தூர் 15, விலை 350ரூ. இந்திய அரசியல் நகர்வில் இறுதியாக நடந்த அரசியல் எழுச்சி நக்சல்பாரி புரட்சி. ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் மக்கள் அடைவதற்கு மார்க்சியமும் லெனினியமும்தான் சரியான பாதை என்பதை உணர்ந்தது, அந்த எழுச்சிக்குப் பிறகுதான். இமயமலையின் அடிவாரத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தோன்றிய விவசாயிகளின் எழுச்சி, பல்வேறு மாநில எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்தமாக இந்தியாவின் அனைத்துப் பகுதியையும் அசைத்துப் பார்த்தது. இந்தியா அப்படியே தலைகீழாக மாறிப் போய்விடவில்லைதான். […]

Read more

உச்சிமுகர்

உச்சிமுகர், குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்கள், விழியன், புக்ஸ் பார் சில்ட்ரன் வெளியீடு, பாரதி புத்தகாலயம், சென்னை. குழந்தைகளுக்காக கதைகள் எழுதிவரும் விழியன் தன் குட்டி மகளுடன் நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதியிருப்பதே உச்சி முகர் என்ற இந்நூல். குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்களை எழுத்தின் மூலம் அவர் வாழ்ந்து பார்க்கிறார். இதை வாசிக்கும் ஒவ்வொரு தகப்பனும் தாயும் தங்கள் குழந்தைகளுடனான மெல்லிய தருணங்களை நினைவுகூர்வார்கள் என்பதே இதன் வெற்றி. தந்தை விழியனுக்கும் குழந்தை குழலிக்கும் இடையிலான தருணங்கள்தான் எத்தனை அழகாக வெளிப்பட்டிருக்கின்றன. குழலி […]

Read more

கவிதைகளின் கால்தடங்கள்

கவிதைகளின் கால்தடங்கள், அகநாழிகை பதிப்பகம், சென்னை. தமிழின் முக்கியமான 50 கவிஞர்களின் 400 கவிதைகளை ஒரே நூலில் காணும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார் கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன். அந்திமழை இணையதளத்தில் வாரந்தோறும் வெளியான தொடர் இப்போது அகநாழிகை பதிப்பகம் மூலமாக நூல் வடிவம் பெற்றுள்ளது. நீண்டகால கவிதை வாசகர் ஒருவரின் நோக்கில் இந்த கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் படித்த கவிதைகளைத் தாண்டி சுதந்திரமாக எழுதப்படும் நவீன புதுக்கவிதை உலகுக்கு ஓர் இளைஞன் வருவது தற்செயலாக நிகழ்வது என்பதைவிட ஒரு வழிகாட்டியின் மூலமாகவே […]

Read more

ஊழிக்காலம்

ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி, சென்னை, விலை 270ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-201-0.html பெற்றெடுத்த பிள்ளைகளில் இருவரைக் களத்தில் பலிகொடுத்துவிட்டு, பேரப்பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அடிக்கடி இடம்பெயர்ந்து, கடைசியில் அயல்மண்ணில் மனம் கூசி நிற்கும் அறுபதைக் கடந்த ஓர் அம்மாவின் கதையைச் சொல்கிறார் தமிழ்க் கவி. குழந்தைகளை மட்டும் தூக்கிக் கொண்டு முதியவர்களையும், ஆடு, மாடுகளையும் அப்படியே கைவிட்டுச் செல்ல நேரும் துயரம். உணவுப் பொருட்களையும், எரிபொருட்களையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல். கைகால்களை நீட்டிப் […]

Read more

கடலில் வசிக்கும் பறவை

கடலில் வசிக்கும் பறவை, நிலாரசிகன், புது எழுத்து வெளியீடு, காவிரிப்பட்டிணம் 635 112, விலை 60ரூ. யதார்த்தமும் மிகுபுனைவும் நிலா ரசிகன் நிலாவை மட்டும் ரசிப்பவர் அல்ல. பிரபஞ்சம் மொத்தத்தையும் மொழியில் ரசிக்க எத்தனிக்கிறார். 90களுக்குப் பிறகு தேவதைக் கதைகளாகவும், உருவக் கதைகளாகவும் கவிதைகளில் எழுதிப் பார்க்கும் போக்கு வலுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக நிலா ரசிகனின் கவிதைகளைச் சொல்லலாம். கடலில் சிக்கும் பறவை தொகுப்பில் நிலா, எண்ணற்ற குட்டிக்கதைகளை உருவாக்குகிறார். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ் நவீனக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகர் தனது […]

Read more

சரித்திரப் பிழைகள்

சரித்திரப் பிழைகள், எஸ். அர்ஷியா, புலம், சென்னை, விலை 120ரூ. மந்திரச் சிமிழில் வெளிப்பட்ட கனல் ஓர் எழுத்தாளர் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தன் கருத்துகளைப் பதிவுசெய்வது அரசியல் அறம் சார்ந்த சிறப்பம்சம். அது எழுத்தாளரைக் கூர்மைப்படுத்தும் ஓர் அறமும் ஆகும். அதே சமயம் அரசியல் ஆதாரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு இது ஒரு கெட்ட கனவு. இன்று தூய படைப்பாளி என்று தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் அரசியல் சாயல் படாமல் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். அர்ஷியா அந்த பாவனைகளைக் களைந்து தன்னைப் பாதிக்கும் பல […]

Read more

நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெ.பி. சந்திரபாபு

நகைச்சுவை சக்கரவர்த்தி ஜெ.பி. சந்திரபாபு, எஸ்.டி.வி., விக்டோரியா பதிப்பகம், பக். 408, விலை 300ரூ. நகைச்சுவை அரசர் சந்திரபாபுவைப் பற்றி எப்படி, இத்தனைத் தகவல்களை ஆசிரியர் சேகரித்தார் என்று, வியக்கும் வண்ணம், அத்தனைத் தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்த நூல். பாபு நடித்த படங்களிலிருந்து, 300க்கும் அதிகமான புகைப்படங்கள், இந்தப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளன. சந்திரபாபுவின் படங்கள், பாடல்கள், வாழ்க்கைத் தகவல்கள் என்ற மும்முனைத் தேடலில், ஐந்தாண்டுகள் மூழ்கி முத்துக்களை எடுத்துத் தந்திருக்கிறார் சொர்ணராஜன், தி. விக்டோரியா (எஸ்.டி.வி.). -எஸ். குரு. நன்றி: […]

Read more

நீர் கொத்தி மனிதர்கள்

நீர் கொத்தி மனிதர்கள், அபிமானி, காவ்யா, சென்னை, பக். 318, விலை 250ரூ. தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், கலை இலக்கியப் பணிக்கான அமைப்பின் நிதியுதவி பெற்று வெளியிடப்படும் இந்த நாவல், ரத்தக் கண்ணீரை வரவழைக்கும் தன்மை கொண்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஓர் இடத்தில் சாம்பாக்கமார்களுக்கும் அவர்களை ஒதுக்கி வைக்கும் சில ஆதிக்க சாதி மதத்தினருக்கும், சாம்பாக்கமார்களுக்கும், அவர்களால் ஒதுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கும் இடையில் ஏற்படும் மோதல்களும், முரண்பாடுகளும் தான் நாவலின் கதை. தண்ணீருக்கான போராட்டம். தலித் இலக்கியப் பொக்கிஷம். […]

Read more

மாற்றங்களை ஏற்போம்

மாற்றங்களை ஏற்போம், ரா. சொக்கலிங்கம், மனிதத்தேனீ பதிப்பகம், பக். 132, விலை 50ரூ. பொது அமைப்புகள், கல்வி நிலையங்கள், இலக்கிய, ஆன்மிக, அரசியல் கூட்டங்கள் என, இதுவரை 15 ஆயிரத்து 500 மேடைகள் கண்டவர் மனிதத்தேனீ சொக்கலிங்கம். மேடை பேச்சை முழுநேரத் தொழிலாக கொண்டுள்ள இவர், மூன்றாண்டுகளாக மேடைகளில் முழங்கியவற்றில் சிலவற்றை தேர்வு செய்து 40 கட்டுரைகளாக தந்துள்ளார். கட்டுரைகளை அறிவியல், மொழி, ஆளுமை, தன்னம்பிக்கை, சுற்றுலா, ஆன்மிகம், சுற்றுச்சூழல், மருத்துவம், ஊடகம், அரசியல் என வைகப்படுத்தி தந்திருப்பது சிறப்பு. மேடைப் பேச்சாளர்கள் கட்டாயம் […]

Read more

பத்துப்பாட்டில் வருணனை மரபுகள்

பத்துப்பாட்டில் வருணனை மரபுகள், முனைவர் ச.பொ. சீனிவாசன், சேகர் பதிப்பகம், பக். 312, விலை 225ரூ. தரமான, அரிதான, செம்மொழி சார்ந்த, நல்ல இலக்கியப் படைப்புகளை வெளியிடுகின்ற மரபை வழக்கமாய்க் கெண்டுள்ள பதிப்பகம் சேகர் பதிப்பகம். பிழை இல்லாது, நல்ல, எளிய கட்டமைப்போடும் நூல்களை வெளியிடும் பாங்கு நேர்த்தியானது. இந்த வரிசையில் நூலாசிரியர் முனைவர் ச.பொ. சீனிவாசன் எழுதிய, பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் என்ற நூலை வெளியிட்டுள்ளார். வருணனை என்னும் சொல் வடமொழித் தழுவல். எனினும் வேறு பெயர்களில் தமிழில் வழங்கியுள்ளதையும் ஆசிரியர் பல […]

Read more
1 2 3 4 5 6 9