ஜீன் ஆச்சர்யம்

ஜீன் ஆச்சர்யம், மொஹமத் சலீம், புலம், விலை 160ரூ. பிரமிக்க வைக்கும் அற்புத அறிவியல் குறித்த நூல். அற்ப கேள்விகள் என்று நாம் ஒதுக்கும் விஷயங்கள் தான் அறிவியலின் ஆதாரம் என்ற சுவாரஸ்யமான கருதுகோளில் இருந்து ஆரம்பிக்கிறது, ‘ஜீன் ஆச்சர்யம்’. கிரேக்க சிந்தனையாளன் பிதாகரசின் விநோதமான கேள்வியில் துவங்கும் மரபணு ஆராய்ச்சியின் வரலாறு, அரிஸ்டாட்டிலின் ஆதிக்கம், ஸ்வாமர்டாம் Vs கிராபின் சண்டை, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலீயின் மார்பக அறுவை சிகிச்சை என்று படிப்படியாக நகர்ந்து செல்கிறது. ‘குரோமோசோமின் உள்ளே மரபணு இருக்கிறது, மரபணு […]

Read more

பொய்கைக்கரைப்பட்டி

பொய்கைக்கரைப்பட்டி, எஸ். அர்ஷியா, புலம், விலை 130ரூ. ஏழை விவசாயிகளின் நிலங்களை லாபநெறி கொண்ட மனிதர்களால் அபகரிக்கப்பட்டு, சமூகத்தின் சொத்துடமையாளர்களிடம் மறுபங்கீடு செய்கிற அவலநிலையை சமகாலத்தின் அதிர்வுகளோடு எழுதப்பட்ட நாவலாகும். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —- ஒரு சாமானியனின் பார்வையில் கம்பன், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. தன் வாழ்வில் எப்போதோ நடந்த நிகழ்வுகளையும், சமூக நிகழ்வுகளையும் கம்பன் பாடலுடன் கொண்டு வந்து பொருத்திப் பார்த்து இந்நூலை படைத்துள்ளார் அந்தமான் கிருண்ணமூர்த்தி. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

சரித்திரப் பிழைகள்

சரித்திரப் பிழைகள், எஸ். அர்ஷியா, புலம், பக். 168, விலை 120ரூ. சமகால நிகழ்வுகள் குறித்த, இந்நூல் ஆசிரியரின் விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையாக, 2011 செப்டம்பர் 11ம் தேதி நடந்த, பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஆய்வுக் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. மதுரை மாவட்டம், யானைமலையை வெட்டி, கோவில் அமைக்க முயன்ற வழக்கில், இயற்கை செய்து வைத்திருக்கும் கலையைக் காட்டிலும் அழகானது வேறு எதுவுமில்லை என்கிறார் நூலாசிரியர். ஓவியர் எம்.எப். ஹூசைன் பற்றிய […]

Read more

தீப்பற்றிய பாதங்கள்

தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர்.நாகராஜ், தமிழாக்கம்-ராமாநுஜம், புலம், சென்னை, விலை 350ரூ. தாழ்த்தப்பட்ட மக்கள் கையேந்தவுமில்லை; அங்கீரம் கேட்கவுமில்லை. கன்னட எழுத்தாளர் டி.ஆர்.நாகாஜன் எழுதிய தீப்பற்றிய பாதங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின் ராமானுஜம் என்பவரால் தமிழில் மொழிபெயர்த்து புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. இரு மொழிகளைக் கடந்து, தமிழில் வந்தாலும், மண்ணின் மனம் மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இந்நூலுக்கு ஆசிஷ் நந்தி முன்னுரை எழுதியுள்ளது, கூடுதல் பலமாக உள்ளது. பூர்வ குடிகளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என, தனியான […]

Read more

தீப்பற்றிய பாதங்கள்

தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர்.நாகராஜ், தமிழாக்கம்-ராமாநுஜம், புலம், சென்னை, விலை 350ரூ. கர்நாடகத்தைச் சேர்ந்த டி.ஆர்.நாகராஜ் கல்விப்புல வட்டாரத்தில் சர்வதேச கவனத்தைப் பெற்றவர். அவர் கன்னட மொழியில் குறிப்பிடத்தக்க தலித் விமர்சகராகவும் செயல்பாட்டாளராகவும் விளங்கினார். இலக்கியத் துறைப் பேராசிரியரான நாகராஜ், சமூக அரசியல் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்போது இலக்கியம் வெளிச்சத்தைக் கொடுக்கும் விளக்காக இருக்க முடியும் என்று நம்பியவர். அறிவை ஒழுங்கமைத்துக்கொள்ள கதை சொல்லல் சிறந்த வழியென்று முன்மொழிந்த அவர், தன்னுடைய கட்டுரைகளையும் கதைகளாகவே வடிவமைத்தார். வாதங்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில் தனது தனிப்பட்ட அனுபவங்களையும் நாட்டாரியல் […]

Read more

சரித்திரப் பிழைகள்

சரித்திரப் பிழைகள், எஸ். அர்ஷியா, புலம், சென்னை, விலை 120ரூ. மந்திரச் சிமிழில் வெளிப்பட்ட கனல் ஓர் எழுத்தாளர் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தன் கருத்துகளைப் பதிவுசெய்வது அரசியல் அறம் சார்ந்த சிறப்பம்சம். அது எழுத்தாளரைக் கூர்மைப்படுத்தும் ஓர் அறமும் ஆகும். அதே சமயம் அரசியல் ஆதாரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கு இது ஒரு கெட்ட கனவு. இன்று தூய படைப்பாளி என்று தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் அரசியல் சாயல் படாமல் தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். அர்ஷியா அந்த பாவனைகளைக் களைந்து தன்னைப் பாதிக்கும் பல […]

Read more

ராவ் சாகிப்

ராவ் சாகிப் எல்.சி. குருசாமி, ம.மதிவண்ணன், கருப்புப் பிரதிகள். அடித்தள மக்களுக்காக ஒலித்த குரல் காலனிய ஆட்சியில் சட்ட மேலவையில் குத்தூசி குருசாமி பேசிய உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய உரைகளில் தலித்துகளும் மட்டுமல்லாது பெண்களுக்கான கல்வி குறித்தும் உரத்துப் பேசுகிறார். பெண்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து தன்னுடைய உரைகளில் வலியுறுத்துகிறார். அடித்தள மக்களின் குரலாகவும், அவர்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான குரல் எழுப்புபவராகவும் விளங்கிய குத்தூசி குருசாமியின் உரைகளை கவிஞர் ம. மதிவண்ணன் தொகுத்தளித்திருக்கிறார். குருசாமியின் உரைகள் பெரியார் மற்றும் […]

Read more

மகிழ்ச்சியான இளவரசன்

மகிழ்ச்சியான இளவரசன், ஆஸ்கார் வைல்டு, தமிழில் யுமா வாசுகி, புலம், சென்னை 5, பக். 96, விலை 70ரூ. பிரியங்களும் மகிழ்வும் உற்சாகமும் அளவில்லாக் கற்பனைகளும் நிறைந்த குழந்தைகளின் உலகம், விமர்சனங்களையும் விசனங்களையும் கொண்டுழலும் வளர்ந்த மனங்களிலிருந்து வேறுபட்ட உன்னதங்கள் நிறைந்த செழுமைமிக்க நிலமென விரிந்துகிடக்கிறது. புராண, இதிகாசங்களும் வாய்மொழிக் கதைகளும் நிரம்பியிருக்கும். தமிழ்ப் பரப்பில் எழுதப்பட்ட குழந்தை இலக்கியங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கவையே. மாயாவிகளும், நன்மை செய்யும் குள்ளமனிதர்களும், தந்திரம் மிகுந்த விலங்குகளும், பேசும் பூக்களும், உயிர் காத்து வைத்திருக்கும் அன்னங்களும், இவர்களின் உலகில் […]

Read more

இயற்கையுடன் இசைந்த பெரு வாழ்வு

இயற்கையுடன் இசைந்த பெரு வாழ்வு, பேரா. ஜான்சி ஜேக்கப், மொழிபெயர்ப்பு யூமா வாசுகி, புலம், சென்னை, விலை 60ரூ. பேரா. 1936ஆம் ஆண்டு கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் நாட்டகம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குறிச்சி என்னும் ஊரில் பிறந்தவர். விலங்கியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் உயர் கல்வி பயின்றவர். 1978ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதன்முறையாக இயற்கையுடன் இருத்தல் என்னும் முகாமை நடத்தினார். 1979ஆம் ஆண்டு SEEK (Society for Environmental Education in Kerala) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இயற்கையுடன் இசைந்த வாழ்க்கை […]

Read more

தமிழக பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்

தமிழக பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள், முனைவர் சி. நல்லதம்பி, புலம். தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெருவாரியான பழங்குடியின மக்கள் வாசித்து வருகின்றனர். தமிழகத்தின் எல்லைப் பகுதியில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் எண்ணிக்கை கணிசமானது. வரலாற்று ஆய்வாளர்களால், பழைய கற்காலம் துவங்கி, இந்த மலைப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தது குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மக்களின் தொடர்ச்சியாக தான், கல்வராயன் மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மனித இனத்தின் மறு உற்பத்தி […]

Read more
1 2