கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள், ப.முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக்.526, விலை ரூ.430. பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகிய மூவரும் மிகச் சிறந்த தமிழ்க் கவிஞர்கள் எனினும், மூவரின் காலமும், பின்னணியும் வேறுபாடுகள் உடையவை. பாரதியாரின் காலம் சுதந்திரப் போராட்ட காலம். அந்தப் பின்புலத்தில் பாரதியார் சிந்தித்தவை, எழுதியவை இருந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டு, தமிழ் இனம், மொழி சார்ந்த அரசியல் பார்வையில் பாரதிதாசனின் கவிதைகள் தோன்றின. கண்ணதாசன் எழுதிய கவிதைகளில் பாரதிதாசனின் தொடர்ச்சி இருந்தாலும் கண்ணதாசனின் அரசியல் பார்வை […]

Read more

வாழ்க்கை ஒப்பந்தம்

வாழ்க்கை ஒப்பந்தம், தந்தை பெரியார், முல்லை பதிப்பகம், விலை 25ரூ. தந்தை பெரியார் 1940-41ஆம் ஆண்டுகளில் 3 திருமணங்களில் நிகழ்த்திய அரிய சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல். வாழ்க்கை துணை ஒப்பந்தத்திற்கு உறுதிமொழியும் அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும்? எனக் கேட்கிறார் தந்தை பெரியார். மேலும் வாழ்க்கை ஒப்பந்தம் பற்றிய அனைத்து கருத்துகளும் மிகத் தெளிவாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இளந்தலைமுறையினர் படித்து உணரவேண்டும். நன்றி: […]

Read more

தமிழர்தம் மறுபக்கம்

தமிழர்தம் மறுபக்கம், தமிழ்க்கோட்டம் வெளியீடு, விலை 175ரூ. தமிழர்களின் வரலாற்றைப் பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும் பல நூல்களை எழுதிப் புகழ் பெற்ற தமிழறிஞர் க.ப. அறவாணன், இந்நூலில் இன்றைய தமிழர்கள் பற்றி பாரபட்சமற்ற விமர்சனத்தை முன்வைக்கிறது. அவர் கூறுகிறார்: வேட்பாளர் தேர்வில் சாதிக்கு முன்னிரிமை கொடுக்கப்படுகிறது. நாம் பெற்ற கல்வியால்கூட, நம்முடைய சாதிப்பற்றை தகர்க்க முடியவில்லை. சாதிய அடித்தளமே இல்லாத மண்ணில் தோன்றிய இஸ்லாம், கிருத்துவம் ஆகிய மதங்கள்கூட, இந்தியாவில் மதம் மாற்றம் பெற்ற கிருத்துவர்களிடையே சாதி அற்ற நிலையை தோற்றுவிப்பதில் தோற்றுப்போய் […]

Read more

காசி இராமேசுவரம்

காசி இராமேசுவரம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 600, விலை 420ரூ. குமரகுருபரர் பேச்சில் மயங்கிய தாராஷூகோ காசி என்ற சொல்லே தூய்மை, மங்கலம் என்ற பொருளுடையது. மங்கலத்தை தரும் சிவபெருமான் அங்கே அருள்பாலிக்கிறார். புத்தர், காசியின் தெருக்கள் வழியே சாரநாத் சென்றார். ஆதிசங்கரர் தனது தத்துவம் வெற்றி காண, வாதுபுரிந்து வெற்றிபெற்ற தலம் அது. குருநானக் பெருமகனார், கங்கைக் கரையில் அமர்ந்திருந்தது மட்டுமின்றி, கபீர்தாசரும், துளசிதாசரும் நடந்த பூமி என, ஆசிரியர் அடுக்கும் தகவல்கள் ஏராளம். அதேபோல் கஜினி முகமது, அலாவுதீன் […]

Read more

பூக்கள் விடும் தூது

பூக்கள் விடும் தூது, ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 224, விலை 100ரூ. இந்த நாவல் ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின் அன்புக்காக, தன் கடந்த கால வாழ்வை துன்ப மயமாக்கியோரை, மன்னிக்கவும் தயாராகிறாள் அந்த அன்னை. இந்த நூலில் இடம்பெறும் மற்றொரு நாவலான, காற்றோடு போராடும் பூக்கள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது. தந்தையின் குடிப்பழக்கத்தால், மகளின் கற்பே பறிபோகும் நிலை, அதிலிருந்து கதாநாயகி மீண்டாளா, அவளின் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியதா […]

Read more

இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும்

இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 328, விலை 245ரூ. இந்திய மாநிலங்கள், மக்கள் இறை நம்பிக்கை, வணங்கப்படும் தெய்வங்கள், விரதங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், மாறுபட்ட வழிமுறைகள், மாநில வாரியாகக் கொண்டாடப்படும் விழாக்கள் அவற்றின் தாத்பரியங்களை அழகாக விளக்குகிறது இந்நூல். பொதுவாக காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை, அந்தந்த மாநிலங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த விழாக்களுக்கான புராண நிகழ்வுகளும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராஜஸ்தான் மேவாரில் கொண்டாடப்படும் டீஜ் விழா, பார்வதி தேவிக்கானது. இதைத் திருமணமான பெண்கள் […]

Read more

ஆன்மாவின் பயணங்கள்

ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 280, விலை 210ரூ. ஆன்மா பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; என்றும் இருப்பது. நமது ஆடை நைந்து போன பிறகு அதனைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய ஆடையை அணிவதுபோல, ஆன்மாவின் ஆடை போன்ற இந்த உடல் சாய்ந்துபோன பிறகு புதிய உடலுக்குள் புகுந்து ஆன்மா இயங்குகிறது என்று கூறுகிறது பகவத்கீதை. அமெரிக்க மனநல மருத்துவரான பிரைன் வைஸ் எழுதிய Many lives Many Matters. Only love is Red ஆகிய நூல்கள் […]

Read more

காசி இராமேசுவரம்

காசி இராமேசுவரம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 599, விலை 420ரூ. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மிகப்பெரிய பாலமான காசியும் இராமேசுவரமும் மிகப் பழமையான புண்ணிய திருத்தலங்கள் மட்டுமல்ல, அவை நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாகவும் திகழ்பவை. இவருடைய படைப்புகளின் வியக்கவைக்கும் தனித்தன்மை என்னவென்றால், அவர் எழுத எடுத்துக்கொள்ளும் பொருளின் மேல் அவருக்கிருக்கும் ஆதிக்கம். அவரது பரந்த விரிந்த அறிவு வேட்கை நூல்களின் தலைப்புகளைப் பார்த்தாலே பிரமிக்க வைத்துவிடும். எடுத்தது எப்பொருளாயினும் அப்பொருளின் நுணுக்கங்களையும் விழுமியங்களையும், ஒன்றுவிடாது ஆழ்ந்து ஆராய்ந்து தக்க […]

Read more

ஆன்மாவின் பயணங்கள்

ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 280, விலை 210ரூ. நம் உடலை இயக்கும் ஆன்மா குறித்து, இந்த நூல் தெளிவாகக் கூறுகிறது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள சில பயிற்சிகள், தனக்கும் கடினமாக இன்று வரை இருந்து வருவதாகவும், வாசகர்கள் சலிப்படைய வேண்டாம் என்றும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார் (பக். 19). ஆன்மா உடலை விட்டு நீங்கியபின், பல்வேறு உணர்வு நிலைக்கு செல்கிறது, தலைகீழாக எண்ணுவது ஒரு சிறந்த ஆழ்நிலை ஏற்படுத்தும் உத்தி, நெற்றியில் தட்டுவதன் மூலம், மனோவசிய நிலை மேலும் ஆழமாகி, […]

Read more

தமிழக பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்

தமிழக பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள், முனைவர் சி. நல்லதம்பி, புலம். தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெருவாரியான பழங்குடியின மக்கள் வாசித்து வருகின்றனர். தமிழகத்தின் எல்லைப் பகுதியில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் எண்ணிக்கை கணிசமானது. வரலாற்று ஆய்வாளர்களால், பழைய கற்காலம் துவங்கி, இந்த மலைப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தது குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மக்களின் தொடர்ச்சியாக தான், கல்வராயன் மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மனித இனத்தின் மறு உற்பத்தி […]

Read more
1 2