கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், விலை 150ரூ. மதுவெறியை விட ஆபத்தானது மதவெறி! ‘உலகில் எங்கெல்லாம் வகுப்புவாதம் மேலாதிக்கம் பெற்றிருக்கிறதோ, அங்கெல்லாம் அது நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்துக்கட்டிவிட்டது. அந்த நாடுகள் யாவும் உள்நாட்டுப்போரில் சிதைந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றன அதே பாதையில் இந்தியாவையும் இழுத்துச் செல்வதுதான் இங்குள்ள வகுப்புவாத சக்திகளின் திட்டம். அவர்கள் பாகிஸ்தானை எதிரியாகச் சித்திரித்துக்கொண்டிருந்தாலும் அவர்களது நடவடிக்கை அரசியல் ரீதியாக இந்தியாவை இன்னொரு பாகிஸ்தானாக மாற்றுவதற்கே வழிவகுக்கும்’ என்ற முன்னுரையைப் படிக்கும்போதே பதற்றமாக இருக்கிறது. புத்தகமாக இடம்பெற்றுள்ள 44 கட்டுரைகளில் 8 […]

Read more

பொதுவுடைமையரின் வருங்காலம்?

பொதுவுடைமையரின் வருங்காலம்?, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 250ரூ. மார்க்ஸியத்தை சாமியாரிஸம் ஆக்கக்கூடாது! இப்படி ஒரு புத்தகத்தைக் கம்யூனிஸ்ட் விமர்சகரோ அல்லது எதிரியோ எழுதி இருந்தால், கம்யூனிஸ்ட்டுகள் (எல்லா பிராண்ட் கம்யூனிஸ்ட்டுகளும்தான்!) அந்த நபர் மீது விழுந்து பிறாண்டி இருப்பார்கள். ஆனால், எழுதியவர் ஒரு கம்யூனிஸ்ட். அதுவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர். அதுவும், தா. பாண்டியன் என்பதால் மார்க்ஸியப் புத்தகங்களை மலையளவு வெளியிட்டுள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறது. ‘பொதுவுடைமை’ என்ற […]

Read more

இனி இல்லை மரணபயம்

இனி இல்லை மரணபயம், உரையும் மொழிபெயர்ப்பும் சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. ஒரு மரணமும் தினசரி மரணமும்! ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர். ஆனால், புத்தகமே எழுதிவிட்டார் சந்தியா நடராஜன். இதயத்தின் ஓரிடத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு, அதற்கான சிகிச்சை பெற்றபோது, அவருக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகமாக வந்துள்ளன. எனவே, மரணத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறார். அதுபற்றிய படைப்புகளைத் தேடத் தொடங்குகிறார். யோசிக்க ஆரம்பிக்கிறார். அவற்றை எல்லாம் தொகுக்கிறார்; எழுதுகிறார். அதையே புத்தகமாகவும் கொண்டுவந்துவிட்டார். யாம் பெற்ற துன்பம் […]

Read more

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள்

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள், ஆ. இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ. வரலாற்றை வெற்றி கொள்ளும் வழி! பாரதி, வ.உ.சி., மறைமலையடிகள், புதுமைப்பித்தன் ஆகியோரது வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் மீது ஆ.இரா.வேங்கடாசலபதியின் எழுத்துக்கள் இதுவரை வெளிச்சம் பாய்ச்சி வந்ததை அறிவோம். இதோ இப்போது இந்த வரிசை மேலும் கூடுகிறது… ஜி.யு.போப், உ.வே.சாமிநாதையர், ம.வீ.இராமானுஜாசாரியர், டி.வி.சாம்பசிவம் பிள்ளை, எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், ஸி.எஸ்.சுப்பிரமணியம், தே.வீரராகவன் ஆகிய ஆளுமைகளின் பன்முகத்திறமைகள் அடையாளப்படுத்துகின்றன. இவர்களோடு பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், எரிக் ஹாப்ஸ்பாம் ஆகியோரது திறனும் சொல்லப்படுகிறது.அனைத்துக்கும் […]

Read more

முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள்

முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள்முன்னோடிகள் ஆளுமைகள் சந்திப்புகள், சூரியசந்திரன், எழில் பதிப்பகம், விலை 250ரூ. அண்டா அன்பும்… டம்பளர் அன்பும்! பேட்டிகள் படிப்பது பரவசமானது. அதுவும் பேட்டிகளின் தொகுப்பைப் படிப்பது பரவசங்களின் உச்சம். இலக்கியம், சமூகம், சூழலியல் என பல்துறை ஆளுமைகளை ஒருசேர ஒரே புத்தகத்தில் அறியக் கிடைப்பது உண்மையில் பொக்கிஷம் போன்றது. அத்தகைய பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார் சூரியசந்திரன். இன்றைய இலக்கிய இதழ்களில் வெளிவரும் பேட்டிகளில் பலதும் சலிப்பை ஏற்படுத்துபவை. ஏனெனில் அவ பேட்டிகளாக, சந்திப்புகளாக இருப்பது இல்லை. எழுதித் தரப்பட்ட கட்டுரைகளுக்கு இடையில் சொருக்கப்பட்ட […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, எவிடன்ஸ் கதிர், விகடன் பிரசுரம், விலை 175ரூ. எத்தனை நிறங்களைப் பூசி இதை இந்திய தேசம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும், நாட்டு நடப்புகள் அத்தனையும் இதை, ‘சாதி தேசம்’ என்றுதான் தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. கோயில் முதல் கொலைகள் வரை, கல்யாணம் முதல் கருமாதி வரை, கிராமத்துப் பள்ளிகள் முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை நடக்கும் சம்பவங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது, ‘சாதி தேசம்’ என்ற அடையாளத்தைத்தான். அதற்கான ‘எவிடென்ஸ்’தான், கதிர் எழுதியுள்ள இந்தப் புத்தகம். சிலரைப் […]

Read more

யாப்பு

யாப்பு டொனமூர் முதல் சிறிசேனா வரை, மு. திருநாவுக்கரசு, ஆகுதி பதிப்பகம், விலை 120ரூ. அரசியல் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் தொடர் தோல்வியைத் தழுவிய நிலையில் கையறு நிலையில் நிற்கிறான் ஈழத்தமிழன். அதற்கு அகத்திலும் புறத்திலும் ஆயிரம் காரணங்கள். எது காரணமாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? சோகத்தைச் சுமந்து சுணங்கிப் போக முடியுமா? சுணக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வந்திருக்கிறது மு. திருநாவுக்கரசுவின் இந்தப் புத்தகம். ஈழத்தமிழர் வாழ்க்கையை தமிழ் உணர்ச்சிமயமாக இல்லாமல், சிங்கள இனவாதமாக பார்க்காமல் மிக நுண்மையாக ஆராய்கிறார் […]

Read more

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்

ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும், தொகுப்பும் பதிவும்: பசு. கவுதமன், ரிவோல்ட் பதிப்பகம், கும்பகோணம், விலை 185ரூ. 50 ஆண்டுகளுக்கு முன் அரசியல் வட்டாரத்தில் பிரபலமான மூன்றெழுத்து ஏ.ஜி.கே. அதாவது, ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களும் அவர் மீதான வழக்கு நாகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று சொல்லும் அளவுக்கு 1960-70 காலகட்டத்தில் சுமார் 140 வழக்குகள் அவர் மீது இருந்தன. இத்தனை வழக்குகள் இருந்தும் அவர் முடங்கிப் போய்விடவில்லை. தலைமறைவு வாழ்க்கையின் போதுகூட அவரை போலீஸ் பிடித்ததாகத் தகவல் இல்லை. […]

Read more

மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்

மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் பண்டைத் தமிழக வரலாறு, சேரர் – சோழர்- பாண்டியர், (20 தொகுதிகள்), பதிப்பு வீ. அரசு, தமிழ்மண் பதிப்பகம், விலை 5495ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024249.html ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும். அந்த இன வரலாற்றை தொல்லியல், கல்வெட்டு, பண்பாட்டு அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிக் குவித்த ஒரு சில ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி வேங்கடசாமி (1900 – […]

Read more

பேர் சொல்லும் நெல்லைச் சீமை

பேர் சொல்லும் நெல்லைச் சீமை, அப்பணசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், விலை 260ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023979.html தாமிரபரணி நதிக்கரையை தீரா தேசம் என்று சொல்வது சொல்வழக்கு. அந்த தீரா தேசத்தைப் பற்றி எழுத்தாளர் அப்பணசாமி தனது அழகு தமிழில் தொகுத்து எழுதியிருக்கும் நூல் இது. நெல்லைச் சீமை, தமிழ் மக்களின் ஐந்து திணைகளுக்கான வாழ்க்கை முறைகளையும் உள்ளடக்கியது. அதாவது மலைகளில் வாழ்ந்த மனிதன் வனங்களில் இறங்கி சமவெளிகளில் நிலை பெற்றது வரையான நாகரிக […]

Read more
1 2 3 9