தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்

தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்,  தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., பக்.248, விலை ரூ.275. தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றை பல்வேறு கோணங்களில் தொகுத்துக் கூறும் முயற்சியாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.கலை இலக்கியம் பற்றி வெவ்வேறு பார்வைகளைக் கொண்ட கா.நா.சுப்ரமண்யம் கட்டுரையும் கா.சிவத்தம்பி கட்டுரையும், கோ.கேசவனின் கட்டுரையும், சுந்தரராமசாமியின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. ராஜ்கெüதமன், பிரமிள், எம்.ஜி.சுரேஷ், ஜெயமோகன், நாஞ்சில்நாடன், அசோகமித்திரன், வீ.அரசு, இரா.கந்தசாமி, சுப்பிரமணி இரமேஷ் ஆகியோரின் கட்டுரைகள் தமிழ்ச் சிறுகதைகளின் வெவ்வேறு போக்குகளைப் பற்றி பேசுகின்றன.மணிக்கொடி காலத்தில் வெளிவந்த சிறுகதைகள், […]

Read more

பேட்டை

பேட்டை, தமிழ்ப்பிரியா, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், பக். 352, விலை 390ரூ. கடந்த, 1735ம் ஆண்டு வாக்கில் மதராஸ் ராஜதானியின், 14வது கவர்னர், ‘மாடர்ன் பிட்’ என்பவரது முயற்சியால் பல நெசவாளர் குடும்பங்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு, சென்னை யில் இப்போது சிந்தாதிரிப்பேட்டை என அழைக்கப்படும் பகுதியில் குடியமர்த்தப்பட்டன. இந்த நெசவாளர்கள், ‘காலிகோ பிராண்ட்’ வகை துணிகளை கலை நேர்த்தியுடன் நெசவு செய்து தயாரிப்பதில் நிபுணர்கள். இந்தத் துணிக்கு அப்போது லண்டன் மாநகரில் ஏக டிமாண்டு. இந்த நெசவாளர்கள் முதலில் சின்ன சின்ன தறிகளை […]

Read more

பழைய யானைக் கடை

பழைய யானைக் கடை (சங்கம் முதல் சமகாலக் கவிதைகள் வரை),  இசை, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., பக்.168, விலை ரூ. 195. சங்க காலம் முதல் சமகாலக் கவிதைகள் வரை உள்ள கவிதைகளில் ‘விளையாட்டு‘ (நகைச்சுவை) எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. தனிப்பாடல் திரட்டில்தான் முதன் முதலாக நிறைய நகைச்சுவை, பகடி, சிலேடை, அங்கதச் சுவையுடைய பாடல்கள் உள்ளன. தொல்காப்பியத்தில் எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்றாக நகை (சிரிப்பு) இடம்பெறுகிறது. ‘அங்கதம்‘ பற்றிய இலக்கணத்தையும் அது குறிப்பிடுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களில் நகைச்சுவைப் […]

Read more

காச்சர் கோச்சர்

காச்சர் கோச்சர், விவேக் ஷான்பாக், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. நகர வாழ்நிலை பட்டம்விடும் நூல் உருண்டைகள் சிக்கிக் கொண்டதை சிறுவன், ‘கோச்சர் காச்சர் ஆயிருச்சு’ என்கிறான். நகரவாழ்வின் இத்தகு சிக்கல்களைப் பேசும் கன்னட நாவலே ‘காச்சர் கோச்சர்’ இதை எழுதிய பொறியியலாளர் விவேக் ஷான்பாக். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகன். புதுமையையும் எளிமையையும் குழைத்து எழுதியிருக்கிறார். பெங்களூரின் பழைய காப்பி ஹௌஸ் கம்பாரில் கதை துவங்குகிறது. சோம்பேறியான பணக்கார இளைஞனே கதை சொல்லி. முதல் காட்சியிலேயே ஓர் இளம்பெண் கோபத்தில் தண்ணீர் கிளாஸையெடுத்துத் தன் நண்பன் […]

Read more

இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை

இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, சு.தியோடர் பாஸ்கரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 190ரூ. மனிதனின் தோழர்கள் இந்தியாவின் நாய் வகைகள் பற்றிய நல்ல அறிமுகம் தரும் நூல் இது. ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி என்கிற தமிழ்நாட்டு வேட்டை நாய்கள் பற்றியும் முதோல், கேரவான், இமாலய மாஸ்டிஃப், இமாலய மேய்ப்பு நாய், கூச்சி, புல்லிகுட்டா, சிந்தி, பக்கர்வால், பட்டி போன்ற பயன்பாட்டு நாய்கள், லாசா ஆப்சோ, திபெத்திய ஸ்பேனியேல், திபெத்திய டெர்ரியர் ஆகிய துணைநாய்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் நாய்கள் வளர்ப்பு பற்றிய […]

Read more

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள்

ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள், ஆ. இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ. வரலாற்றை வெற்றி கொள்ளும் வழி! பாரதி, வ.உ.சி., மறைமலையடிகள், புதுமைப்பித்தன் ஆகியோரது வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் மீது ஆ.இரா.வேங்கடாசலபதியின் எழுத்துக்கள் இதுவரை வெளிச்சம் பாய்ச்சி வந்ததை அறிவோம். இதோ இப்போது இந்த வரிசை மேலும் கூடுகிறது… ஜி.யு.போப், உ.வே.சாமிநாதையர், ம.வீ.இராமானுஜாசாரியர், டி.வி.சாம்பசிவம் பிள்ளை, எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், ஸி.எஸ்.சுப்பிரமணியம், தே.வீரராகவன் ஆகிய ஆளுமைகளின் பன்முகத்திறமைகள் அடையாளப்படுத்துகின்றன. இவர்களோடு பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், எரிக் ஹாப்ஸ்பாம் ஆகியோரது திறனும் சொல்லப்படுகிறது.அனைத்துக்கும் […]

Read more

அசோகமித்திரன் சிறுகதைகள்

அசோகமித்திரன் சிறுகதைகள், தொகுப்பு க. மோகனரங்கன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 1450ரூ. 274 சிறுகதைகள் கொண்ட அசோகமித்திரனின் ஒட்டு மொத்தத் தொகுப்பு இது. எல்லாவற்றையும் மொத்தமாகப் படிக்கும்போது, இலக்கியத்தில் அவர் எவ்வளவு தூரம் சமரசமின்றி செயல்பட்டு இருக்கிறார் என்பதைக் காணமுடிகிறது. சிறுகதை என்பது வெறும் மொழியோ, புனைவோ, வடிவநேர்த்தியோ, உத்திப்புதுமைகளோ மட்டுமன்று. அது அசோகமித்திரனின் எழுத்தில் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி காட்டுவது. அப்படிப் பார்த்தால் அவரின் கதைகளில் எப்போதும் மேலதிக ஆழமுண்டு. மிக எளிய மனிதர்களின் நாடித்துடிப்புகளை ஆகப்பெரும் அன்போடும், கண்ணீரோடும் தொட்டுத் தடவி […]

Read more

தமிழகத்தின் ஈழ அகதிகள்

தமிழகத்தின் ஈழ அகதிகள்,  காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 80ரூ. தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் பற்றியும், அங்குள்ள தமிழ் ஈழ அகதிகளின் அவலங்களைப் பற்றியும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. இந்த நூலை 8 ஆண்டுகள் அகதிகள் முகாமில் வாழ்ந்த தொ. பத்தினாதன் எழுதியுள்ளார். முகாம்களில் அகதிகளின் வாழ்க்கை நிலை, அவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம், எப்போதும் கண்காணிப்பு என்னும் கொடுமை போன்ற பல்வேறு செய்திகளைத் தருகிறார். ‘எங்களுக்கு இலவசமோ, உதவித்தொகையோ தேவையில்லை. எங்களுக்குத் தேவை சுதந்திரமான வாழ்க்கை – இங்கு வாழும்வரை’ என்பதை […]

Read more

பயணம்

பயணம், அரவிந்தன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 350ரூ. இனி இந்த வீடு என்னுடையதல்ல என்னும் எண்ணத்துடன் வீட்டைவிட்டு வெளியேறும் இளைஞனான ராமநாதனின் துறவுப்பயணமே 390 பக்கங்களில் விரியும் இந்நாவல். ஒரு இந்து சுவாமியின் ஆசிரமத்தில் சேர்ந்து, ஆசிரமம் செய்கிற சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல கிராமங்களில் அவன் பணியாற்றி தன்னையும் உயர்த்திக்கொள்கிறான். யோகாசனங்களில் சிறந்தவனாக இருக்கும் அவன் தன் பயணத்தில் ஆசான்கள் மூலம் மேலும் திறமைவாய்ந்த யோகாசனப் பயிற்சியாளன் ஆகிறான். ஆனால் அவனால் பிரம்மச்சர்யம் காக்க முடிவதில்லை. ஒரு பெண் மீது […]

Read more

பால்ய வீதி

பால்ய வீதி, தெ.சு.கவுதமன், கவி ஆதவன் புத்தகக்கருவூலம், சென்னை, பக். 80, விலை 80ரூ. அன்றாட வாழ்வின் அனுபவத்திலிருந்து வாழ்வின் அர்த்தத்தை தன் கவிதைகள் வழி தேடுகிறார் கவுதமன். அப்படிப்பட்ட கவிதைகளின் தொகுப்பே பால்யவீதி. இச்சமூகத்தின் மேல் காட்டும் கோபம் ஆத்திரம் ஆதங்கம் சோகம் எல்லாமே, இச்சமூக மாற்றத்திற்கான ஒரு பாங்காக்கிக்காட்ட முயல்கிறார். ஏதோ பொழுதுபோக்குக்காக கவிதை எழுதாமல், அடக்கமுடியாமல் போன அந்த முதல் மனிதன் அடங்கியிருந்தால் காணாமல் போயிருக்கக்கூடும் பல மூத்திரச் சந்துகள் என்று சமூகத்திற்கான மாற்றம் வேண்டிய எண்ணப்பதிவுகளாக நம் மனதிற்குள் […]

Read more
1 2 3