பச்சை விரல் பதிவு

பச்சை விரல் பதிவு, வில்சன் ஐசக், தமிழில் எஸ். ராமன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், நாகர்கோவில், பக். 144, விலை 120ரூ. கேரள மாநிலத்தில் பிறந்தபோதிலும் இந்தியாவில் துயரம் நேர்ந்த பகுதிகளுக்கெல்லாம் சென்று தொண்டு செய்த பெண்மணி தயாபாய் (மேர்சி மாத்யூ) பற்றிய நூல். சுயசரிதை என்றாலும் அவரது களப்பணிகளின் பதிவுகள் மட்டுமே இடம்பெறுகிறது. பிகாரில் கோண்டு பழங்குடியினரிடையே சுமார் 14 ஆண்டுகள் வாழ்ந்து, அவர்களது வாழ்வின் மேம்பாட்டுக்காக சேவை புரிந்திருக்கிறார். அதிகார வர்க்கத்தின் மெத்தனப்போக்கு, ஆதிவாசிகளின் அறியாமை இரண்டுக்கும் பாலமாக இருப்பதைப் […]

Read more

எது சரியான கல்வி

எது சரியான கல்வி, முனைவர் வெ. இறையன்பு, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. மதிப்பெண் தேடும் கல்வியைத் தாண்டி வாழ்வியல் மதிப்புக்களை நாடும் கல்வியாக படிப்புமுறை எப்படி மாற வேண்டும் என்பதை நூலாசிரியரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான முனைவர் வெ. இறையன்பு சிந்தனைச் சுவைபட எளிய நடையில் இந்த நூலில் கூறி உள்ளார். முறையான கல்வி என்பதே முறைசாராக் கல்வி தான் என்றும், மனப்பாடம் செய்வதை கற்றுக் கொள்வதையே கல்வி என எண்ணுபவர்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பதையும் நூலாசிரியர் ஆணித்தரமாக கூறியுள்ளார். […]

Read more

அப்பாவின் துப்பாக்கி

அப்பாவின் துப்பாக்கி, ஹினெர் சலீம், தமிழில் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்,, பக். 112, விலை 90ரூ. குர்திஸ்தான் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களின் வரலாற்றை, சிறுவன் ஆசாத்தின் கதைக்குப் பின்புலமாக்கியதன் நோக்கம் நூலில் நிறைவேறியுள்ளது. குர்திய மக்களின் விடுதலை வேட்கையைப் பதிவு செய்வதுதான் நூலாசிரியரின் நோக்கம். அதைத்தான் அப்பாவின் துப்பாக்கியாக வடித்துள்ளார். கூடவே, அந்நாட்டின் இயற்கை வளம், பண்பாட்டுக் கூறுகள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றின் மேல் விழும் சிதைவுகளையும் மறக்காமல் பதிவு செய்கிறார். வழக்கமான […]

Read more

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு, ரேமண்ட் கார்வர், தமிழில் செங்கதிர், எம். கோபாலகிருஷ்ணன், க. மோகனரங்கன், விஜயராகவன் வெளியீடு, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, விலை 200ரூ. இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் அமெரிக்க எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் யதார்த்தவாத சிறுகதை மரபை மீட்டவர். அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகளின் தமிழ்மொழி பெயர்ப்பே வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு என்ற இச்சிறுகதைத் தொகுப்பு. யதார்த்தவாதம் என்பது இன்னும் வீரியமான கதை சொல்லல் விதமாகவே உள்ளது என்பதை […]

Read more

கலங்கிய நதி

கலங்கிய நதி, பி.ஏ. கிருஷ்ணன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், பக். 334, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-194-2.html தமிழிலும் ஆங்கிலத்திலும் திறம்பட எழுதும் மிகச்சில இந்திய எழுத்தாளர்களில் ஒருவர் பி.ஏ.கிருஷ்ணன் முதல் நாவல் புலி நகக் கொன்றை. இந்த நூலை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதினார். அது பெங்குயின் வெளியீடாக 1998ல் வெளிவந்தது. அதன்பின் கலங்கிய நதி கிருஷ்ணணின் இரண்டாம் புதினம். இதையும் முதலில் தி மட்டி ரீவர் என்று ஆங்கிலித்தில் எழுதினார். அவரே இதைத் […]

Read more

புயலுக்குப் பின்னே பூந்தென்றல்

புயலுக்குப் பின்னே பூந்தென்றல், சுப. உதயகுமாரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-3.html சுப. உதயகுமாரன் யார், கூடங்குளம் தொடங்கும்போதெல்லாம் அவர் எங்கே போனார்… இதுபோன்ற கேள்விகளை கூடங்குளம் அணு உலை ஆதரவாளர்கள் அடிக்கடி கேட்பார்கள். எல்லாக் காலத்திலும் போராட்டம் நடத்தக்கூடியவராகத்தான் இருந்துள்ளார் என்பதை நிரூபிக்கும் புத்தகம் இது. 1981 முதல் 87 வரை எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார் சு.ப.உதயகுமாரன். ஒரு […]

Read more

உயிரைத் தேடி

உயிரைத் தேடி, வ. தென்கோவன், அருள்மிகு சீதளாதேவி அம்ன் பதிப்பகம், 41, சீதள மகால், டாக்டர் ராதாகிருண்ணன் சாலை, அம்மையார் நகர், கீழகாசாக்குடி, காரைக்கால், பக். 168, விலை 125ரூ. சைவ சமயத்தின் சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு. அவற்றுள் முதன்மையானது மெய் கண்டார் இயற்றிய சிவஞானபோதம். திருவியலூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருவுந்தியாரும் திருக்கடவூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருக்களிற்றுப்படியாரும் காலத்தால் சிவஞான போதத்திற்கு முற்பட்டவையாயினும் சித்தாந்த சாத்திர நூல்களில் சிவஞான போதமே முதல் நூலாக விளங்குகிறது. அத்தகைய சிவ […]

Read more

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், பிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 1, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை பிபிசியின் செய்தியாளராக இலங்கையில் பணிபுரிந்த பிரான்ஸிஸ் ஹாரிசன் என்பவர். ஆங்கிலத்தில் ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இதனை தமிழில் என்,கே. மகாலிங்கம் மொழிபெயர்த்து உள்ளார். இந்த நூலில் 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த […]

Read more

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில் 1, விலை 140ரூ. இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009 மே 18ந் தேதிக்கு பிறகு நடந்த பேரழிவினால் பாதிக்கப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே முள்ளிவாய்ககாலில் தொடங்கும் விடுதலை அரசியல். இதனை செய்திதுறையில் இணை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பா. செயப்பிரகாசம் எழுதி தொகுத்துள்ளார். 15 தலைப்புகளில் முள்ளிவாய்க்கால் கொடுமைகளை எழுதியிருப்பதை படிக்கும்போதே நம்முடைய நெஞ்சம் பதறுகிறது. இனப்படுகொலையும் இந்தியாவும், உலக தமிழர்களை காப்பது யார், இப்போதாவது […]

Read more

போர்த்தொழில் பழகு

போர்த்தொழில் பழகு, புதியதலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், இக்காட்டுத்தாங்கல், சென்னை – 32, விலை: ரூ. 250. “போர்த்தொழில் பழகு” என்றார் மகாகவி பாரதியார். மனித இனம் போரின் தீமைகளை உணர்ந்திருந்தாலும் சிலநேரங்களில் அடுத்தவர்கள் நம் எல்லைகளை ஆக்கிரமிக்கும் போதும், பண்பாட்டை அழிக்கிற போதும் தடுத்து நிறுத்துவதற்காகப் போர் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போரின் நெறிமுறைகளை உணர்பவனே தன்னையும், நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். நூலாசிரியர் வெ. இறையன்பு, நாற்பது அத்தியாயங்களில் போரின் பல்வேறு உத்திகளையும் விளக்குகிறார். இந்நூலில் இருக்கின்ற விவரிப்புகள் […]

Read more
1 2 3