எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான், தொகுப்பு ஷோபாசக்தி, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 140ரூ. ஈழம் பேசிப் பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப்படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ் தேசியம் சார்ந்த ஆதரவு தளத்தில் இயங்கியவர்கள். புலிகள் இயக்கத்துடன் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள். பழ. ரிச்சர்ட், இடது சாரியாக அறியப்பட்டவர். […]

Read more

தலைப்பற்ற தாய்நிலம்

தலைப்பற்ற தாய்நிலம், மஞ்சுள வெடிவர்தன, தமிழில் ஃபஹீமா ஜஹான், எம். ரிஷான் ஷெரீப், நிகரி எழுநா வெளியீடு, சென்னை, விலை 50ரூ. கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து? என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன. இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். மேரி எனும் மரியா என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் […]

Read more

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள்

இந்தியாவும் ஈழத்தமிழரும் அவலங்களின் அத்தியாயங்கள், நிராஜ் டேவிட், தோழமை வெளியீடு, சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-561-4.html ஈழப் போராட்டம் இலங்கையில் நடந்தாலும், இந்தியாவின் கால் நூற்றாண்டு கால அரசியலைப் பாதித்த போராட்டம். இந்திய அமைதிப்படையை அனுப்பி 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு யுத்தம் தொடங்கியது முதல் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கோரக்கொலைக்கு ராணுவரீதியாக உதவிகள் செய்தது வரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் கடுமையான விமர்சனத்துக்கு உரியவை. சிங்கள அரசின் இரவல் […]

Read more

நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்1

நீந்திக்கடந்த நெருப்பாறு பாகம்1, அரவிந்தகுமாரன், தமிழ்லீடர், ஆஸ்திரேலியா. போர்க்காலம் தமிழில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகள் ஈழத்து மண்ணில் இருந்துதான் முகிழ்க்க வேண்டும். ஏனெனில் அந்த சமூகமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்று சொல்லுவதுண்டு. முள்ளிவாய்க்கால் போன்ற பெரும் அழித்தொழிப்புக்கும் ஆயுதப் போராட்டத் தோல்விக்கும் பின்னர் தன்னை மீட்டெடுக்க கடந்த நான்காண்டுகளாக அச்சமூகம் போராடி வருகிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்துவரும் படைப்புகள். அதில்ஒன்றுதான் நீந்திக்கிடந்த நெருப்பாறு என்கிற இந்த நாவல். இது ஒரு போர் நாவல். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் […]

Read more

பிஞ்சுச் சாவு

பிஞ்சுச் சாவு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான சாலை, ராயப்பேட்டை, சென்னை 14,விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-7.html பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரணம் குறித்து 87 கவிஞர்கள் நெஞ்சு பொறுக்க முடியாத வேதனையில் படைத்த கண்ணீர்க் கவிதைகளின் தொகுப்பு நூல். பாலச்சந்திரன் தன் உயிரைக் கொடுத்து உலகின் பார்வையை தமிரீழத்தின் பக்கம் திருப்பியிருக்கிறான். அவர் மார்பைத் துளைத்த தோட்டாக்கள், லட்சக்கணக்கான தமிழீழ மக்களைக் கொன்று குவித்த கொடுரத்தை உலகின் பார்வைக்குகொண்டு சென்றிருக்கிறது. அவனது ஒற்றை மரணம், ஒரு […]

Read more

புலித்தடம் தேடி

புலித்தடம் தேடி, மகா. தமிழ்ப்பிரபாகரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-137-9.html மூன்று ஆண்டுகளுக்கு முன் மரண ஓலத்தில் இருந்த ஈழத்தில் இன்று மயான அமைதி. பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொடூரப் போர் அது. கொத்துக் குண்டுகளுக்கு பலியானோர் போக மிச்சம் இருப்பவர்களை, பட்டினி போட்டும் பணியவைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கவைக்கும் இனவெறித் தந்திரம் மட்டுமே அங்கு செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் […]

Read more

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, பேட்ரிஷியா பதிப்பகம், 2/40, பி, இரண்டாம் தளம், ராம்நகர், நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ. ஸ்ரீபெரும்புதூரில் 1991ல் நடந்த ராஜீவ் காந்தி படுகொலை ஒட்டுமொத்த தமிழின வரலாற்றில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்திய ஒன்று. இன்று அது முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழிக்கப்பட்ட நிகழ்வு வரைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த படுகொலை மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்திய வரலாறு நிச்சயமாக வேறாக இருந்திருக்கும். ஒருவேளை இலங்கையில் நிலைமை கூட இப்போதிருப்பதில் இருந்து முற்றிலும் வேறாக இருந்திருக்கலாம். […]

Read more

ஐந்தாம் கட்ட விடுதலை போர்

ஐந்தாம் கட்ட விடுதலைப் போர், கண்மணி, மானுட நம்பிக்கை, 568எ, எட்டாவது முதன்மைச் சாலை, மகாகவி பாரதி நகர், வியாசார்பாடி, சென்னை 39, பக். 534, விலை 225ரூ. தமிழீழம் தேவையா? தேவையில்லையா? என்று பேசும் பலரும், அது இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் பிரச்னைகளாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். அத்தகையோரை கடுமையாக சாடுவதோடு, அது நம் சகோதரர்களின் பிரச்னை என்ற உறுதியோடு நூல் முழுவதும் பேசுகிறார் கண்மணி, கடந்த 10ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வந்த வரலாற்று நிகழ்வுகளை நூல் முழுதும் பதிவு செய்கிறார். பேச்சுவார்த்தை […]

Read more

திரை வளர்த்த நான், நான் வளர்க்கும் திரை

திரை வளர்த்த நான், நான் வளர்க்கும் திரை, மு. இராமசுவாமி, செப்பிபடைப்பகம், 20, இருளாண்டிக் காலனி, விராட்டி பத்து, மதுரை 10, பக்க.448, விலை 400ரூ. தமிழித் திரைப்படப் பயணத்தில் இது ஒரு புதிய பாதை. நூலாசிரியர் மு. இராமசுவாமி, 1972 முதல் 2012 வரையிலான 40 ஆண்டுகால தமிழ் சினிமாவின் போக்கை, வளர்ச்சியை, மாற்றத்தை, அதன் வீழ்ச்சியை, உயர்வை அவரது பார்வையில் பல்வேறு இதழ்களில் பல்வேறு தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். அவற்றின் ஒரு தொகுப்பு இந்நூல். தமிழ் சினிமாவைப் பற்றிய அதன் ஊடாக […]

Read more

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில் 1, விலை 140ரூ. இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009 மே 18ந் தேதிக்கு பிறகு நடந்த பேரழிவினால் பாதிக்கப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே முள்ளிவாய்ககாலில் தொடங்கும் விடுதலை அரசியல். இதனை செய்திதுறையில் இணை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பா. செயப்பிரகாசம் எழுதி தொகுத்துள்ளார். 15 தலைப்புகளில் முள்ளிவாய்க்கால் கொடுமைகளை எழுதியிருப்பதை படிக்கும்போதே நம்முடைய நெஞ்சம் பதறுகிறது. இனப்படுகொலையும் இந்தியாவும், உலக தமிழர்களை காப்பது யார், இப்போதாவது […]

Read more
1 2