ஸ்வரஜதி

ஸ்வரஜதி, சீதா ரவி, கல்கி பதிப்பகம், பக். 168, விலை 100ரூ. கல்கியின் ஆசிரியராக விளங்கிய, சீதா ரவி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இசையையும், மனித மனங்களையும் மிக நுணுக்கமாக அணுகி, அனுபவித் நூலாசிரியர், கதைகளாக வடித்திருக்கிறார். ஒரு மலர் மலர்ந்து இதழ் விரிப்பதைப் போன்ற வர்ணனைகள் மனதைக் கொள்ள கொள்கின்றன. ‘மடியிலிருந்து வீணையை இறக்கி வைத்தான் கமலம். வாசித்து முடித்த கல்யாணி ராகத்தின் ஒய்யார வளைவுகளும், ஒடுங்கிய முடுக்குகளும், மழை நாளின் குளிர்ச்சியாகச் சூழ்ந்திருந்தன. தியாகேசர் கோவிலில், அவள் நாட்டியம் செய்வதைப் பார்த்திருக்கிறான். […]

Read more

மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்

மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில், தமிழில் மு.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.விவேகானந்தம், அகநி வெளியீடு, பக். 192, விலை 150ரூ. மருது பாண்டியர் குறித்து, ரெவரன்ட் பாதர் பாச்சி எழுதியுள்ள, மருதுபாண்டியன் தி பேட்புல் எய்ட்டீன்த் செஞ்சுரி எனும் இந்த நூல், குறிப்பிடத்தக்கது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழகத்தில் சமயப்பணி ஆற்றிய, கத்தோலிக்க பிரெஞ்சுப் பாதிரியாரான பாச்சி, ராமநாதபுரம் மற்றம் சிவகங்கை ஆட்சியாளர்களிடம் பழகியுள்ளார். அரசு நடவடிக்கைகள், ஆங்கிலேயர்களின் அதிகார குறுக்கீடுகள், பாளையக்காரர்களின் கிளர்ச்சிகள் என பலவற்றை, தன் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, மருது […]

Read more

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை, அ.மா. சாமி, நவமணி பதிப்பகம், சென்னை, விலை 240ரூ. பாமரர்களையும் படிக்க வைத்த பத்திரிகை உலக முடிசூடா மன்னர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற லட்சியத்துடன் வாழ்ந்தவர். போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைவிலங்கு போடப்பட்ட ஒரே அரசியல் தலைவர். இவ்வாறு வாழ்க்கை முழுவதும் தமிழர் நலனுக்காக பல போராட்டங்களை சந்தித்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சிமிக்க நடையில் எழுதியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி. ஆதித்னாருடன் […]

Read more

ஒரு பூ ஒரு பூதம்

ஒரு பூ ஒரு பூதம், மருதன், கல்கி பதிப்பகம், விலை 40ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-340-2.html உங்கள் குழந்தைகளுக்கு சுவாரசியமான, ஜாலியான, அட்டகாசமான கதைகளைச் சொல்ல வேண்டும் என்றால், அவசியம் இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்க வேண்டும். இந்தக் கதைகளைக் கேட்டால் குழந்தைகளே ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நன்றி: கல்கி, 7/9/2014.   —- முதலுதவி, டாக்டர் கு. கணேசன், கல்கி பதிப்பகம், விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-318-7.html நமக்கு முதலுதவி […]

Read more

பாரதிதாசன் யாப்பியல்

பாரதிதாசன் யாப்பியல், ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 120ரூ. எட்டயபுரத்துக் கவிஞரின் அடியொற்றி இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இரண்டாவது பெரும் கவிஞராகத் திகழ்ந்தவர் புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால் படைப்புகளின் எண்ணிக்கை என எடுத்துக்கொண்டால் பாரதியை விட அதிக படைப்புகளைத் தந்தவர் அவர். ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து, வண்ணம் என விதவிதமான யாப்பு வகைகளை தமது கவிதை இலக்கியங்களில் எழிலுறக் கையாண்டவர் அவர். மரபை அடியொற்றி மட்டுமின்றி, அதில் புதுமைகளைப் புகுத்தும் விதத்திலும் அந்தந்தச் சூழலுக்கு […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, விலை 100ரூ. தியாகசீலர் கக்கன்ஜியைப் பற்றிய ஒரு விரிவான நூல் வெளியாவது இதுதான் முதல் முறை. அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்ட இந்நூலாசிரியர் மிகவும் சிரமப்பட்டிருப்பதை இந்நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. மிக எளிய குடும்பத்தில், அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர், விடுதலைப் போராட்ட வீரராகவும், சிறந்த கொள்கைப் பிடிப்புள்ளவராகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும், நிர்வாகத் திறமை மிக்கவராகவும், இறுதிவரை எளிய வாழ்க்கையையே விரும்பியவராகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உயர்ந்து விளங்கியுள்ளது பாராட்டத்தக்கது. இவரின் பிறப்பு […]

Read more

கீதாஞ்சலி

கீதாஞ்சலி, தாகூர், தமிழில் சி. ஜெயபாரதன், தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 125ரூ. இரவீந்திரநாத் தாகூர் நோபல்பரிசு பெற்ற கவிதைத் தொகுப்பு நூல். தேசம், மொழி, இன்பம், துன்பம், அன்பு, நட்பு, கருணை, ஆன்மா, ஆற்றாமை, காத்திருப்பு, மரணம் என வாழ்வின் அனுபவங்களை தாகூர் அளவிற்கு உணர்வுபூர்வமாக யாரும் எழுதிவிடமுடியாது என்பதற்கான சாட்சியே இக்கவிதைகள். வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து, வாழ்க்கைப் பயணத்தின் முடிவுக்கு காத்திருக்கும் வரையில் விழிப்புணர்வு மிக்க கீதங்கள் இவை. இறுகிப்போன வயலை உழும் உழவன், வேர்வை சிந்தி கல்லுடைக்கும் தொழிலாளி, […]

Read more

அப்பாவின் துப்பாக்கி

அப்பாவின் துப்பாக்கி, ஹினெர் சலீம், தமிழில் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்,, பக். 112, விலை 90ரூ. குர்திஸ்தான் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களின் வரலாற்றை, சிறுவன் ஆசாத்தின் கதைக்குப் பின்புலமாக்கியதன் நோக்கம் நூலில் நிறைவேறியுள்ளது. குர்திய மக்களின் விடுதலை வேட்கையைப் பதிவு செய்வதுதான் நூலாசிரியரின் நோக்கம். அதைத்தான் அப்பாவின் துப்பாக்கியாக வடித்துள்ளார். கூடவே, அந்நாட்டின் இயற்கை வளம், பண்பாட்டுக் கூறுகள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றின் மேல் விழும் சிதைவுகளையும் மறக்காமல் பதிவு செய்கிறார். வழக்கமான […]

Read more

கர்ணன்

கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, பக். 376, விலை 320ரூ. பாரதப் போரில் அர்ச்சுனன் தர்ம யுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி கர்ணனைக் கொலை செய்தானா? குந்திதேவி கர்ணனைத் தன் மகன் என்று அறிமுகப்படுத்தாதன் நோக்கம் என்ன? தர்மன் உண்மையில் சமாதானத்திற்கான வழியை நாடினானா அல்லது நாடு முழுவதையும் அபகரிக்கும் எண்ணத்தில் இருந்தானா? கர்ணன் துரியோதனனுக்கு நண்பனாக செயல்பட்டானா? துரோகம் செய்தானா? துரியோதனன் நட்புக்காக கர்ணனை ஆதரித்தானா? அல்லது தன் பாதுகாப்புக்காகவா? போன்ற […]

Read more

இந்திரா சந்திரா மந்திரா

இந்திரா சந்திரா மந்திரா, கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங்ஸ், 47, என்.பி. ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, விலை 50ரூ பெரியவர்களுக்காக பல சிறந்த நாவல்களை எழுதியுள்ள கல்கி ராஜேந்திரன், சிறுவர்களுக்காகவும் பல்வேறு புனை பெயர்களில் கதைகள் எழுதியுள்ளார். ஜெயந்தி என்ற புனை பெயரில் அவர் எழுதிய இந்திரா சந்திரா மந்திரா என்ற நாவல் கோகுலத்தில் தொடர்கதையாக வெளிவந்தது. இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. சிறுவர் சிறுமிகள் புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடிக்கும்வரை கீழே வைக்க மாட்டார்கள். அவ்வளவு விறுவிறுப்பு. நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 2 3