நீதிக்கட்சி வரலாறு (1616-1944)

நீதிக்கட்சி வரலாறு (1616-1944), க. திருநாவுக்கரசு, நக்கீரன் வெளியீடு, விலை 1200ரூ. நூற்றாண்டு விழாவை நெருங்கிகொண்டு இருக்கும் திராவிட இயக்கத்தின் முதல் 30 ஆண்டு கால முழுமையான வரலாறு இது. திராவிடர் இயக்க வரலாற்றுக் கணினி என்று பாராட்டப்பட்ட க. திருநாவுக்கரசு தனது அதீதமான உழைப்பால் இதை உருவாக்கியிருக்கிறார். அடுத்து சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முழுமையான வரலாற்றையும் அவர் பரபரப்பாய் எழுதி வருகிறார். பலரது கூட்டுமுயற்சியால் உருவாக்கப்பட வேண்டிய, பெரிய உழைப்பு தேவைப்படும் ஒரு பணியை தனி […]

Read more

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 115ரூ. என்னுடைய வாரிசு ஜவஹர்லால் என்று காந்தி சொன்னார். இரண்டு பேருக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் காந்தியச் சிந்தனைக்கு மாற்றாக நேரு நடக்க மாட்டார் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியது மட்டுமல்ல, இந்தியாவை வடிவமைத்தவர் நேரு. இந்தியா தனது முதலாவது விடுதலை நாளைக் கொண்டாடியபோது, அதைச் செய்தியாக வெளியிட்ட பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று. ‘அடுத்த ஆண்டு இப்படி […]

Read more

இந்தியா வரலாறும் அரசியலும்

இந்தியா வரலாறும் அரசியலும், டி. ஞானய்யா, விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர், விலை 400ரூ. 95 வயதையும் தாண்டி வாழும் வரலாறாக வாழ்ந்துகொண்டு இருப்பவர் தோழர் டி.ஞானய்யா. இன்றும், இன்னும் எழுதிக்கொண்டும் இருக்கிறார். நீண்ட ஆயுளுக்கு உடல் நலம் மட்டும் காரணம் அல்ல, சிந்தனைத் தெளிவும் முக்கியக் காரணமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் இவர். அவரது வன்மையான எழுத்தில் இந்தியாவின் வரலாறு சீரான பார்வையுடன் செதுக்கித் தரப்பட்டுள்ளது. புத்தகங்களில் இருந்து அல்லாமல், தன்னுடைய 74 ஆண்டுகால அரசியல் பயண அனுபவங்களின் மூலமாகப் பல்வேறு நிகழ்வுகளை அவர் […]

Read more

சாமிநாதம்

சாமிநாதம், (உ.வே.சா. முன்னுரைகள்), பதிப்பாசிரியர் ப. சரவணன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 1000ரூ. தமிழ் இலக்கியம் பிழைத்திருப்பதற்குக் காரணமான தனிமனிதர்களில் முக்கியமானவர் உ.வே.சா. எந்த வசதிகளும் இல்லாக் காலத்தில் தன்னுடைய தமிழ் உணர்ச்சியை மட்டுமே உந்து சக்தியாகக் கொண்டு ஊர் ஊராகத் திரிந்து ஓலைச்சுவடிகளைத் திரட்டி வந்து, எழுத்தெண்ணிப் படித்து, பாடம் பிரித்து அவர் பதிப்பித்திருக்காவிட்டால் புறநானூற்றுப் பெருமையும் சிலப்பதிகாரத்தின் சிறப்பும் மணிமேகலையின் வனப்பும், திருவிளையாடற் புராணத்தின் நயமும் அறியாமல் போயிருக்கும் தமிழ்ச்சமூகம். ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது என்பதையே படிக்கத் தெரியாமல், படித்தாலும் […]

Read more

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-1.html மன்த்லி ரெவ்யூ கட்டுரைகள் (1949 – 1998) அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் முதல், போராளி சேகுவேரா வரை எழுதிய பத்திரிகை என்ற பெருமை மன்த்லி ரெவ்யூ இதழுக்கு உண்டு. இதன் ஆசிரியர்களாக இருந்த பால் ஸ்வீசியும் லியோ ஹீயுபர்மேனும் கம்யூனிஸ்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். (இதே விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டவர்தான் சார்லி சாப்ளின்) இவர்கள் இருவரும் அமெரிக்காவில் […]

Read more

யாழ்ப்பாண அகராதி

யாழ்ப்பாண அகராதி, சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை, தமிழ்மண் பதிப்பகம், சென்னை, விலை 1240ரூ. (இரண்டு தொகுதிகளும்). கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி பேசிய தமிழ் மொழியின் தொன்மையும் பழைமையும் யாராலும் இன்னும் முழுமையாகக் கணிக்க முடியாதது. கற்காலம் முதல் இன்றைய கணினி காலம் வரையிலும் தன் தனித்தன்மை மாறாமல் உயிரைத் தக்கவைத்து உணர்வுபூர்வமாகவும் வளர்ந்தும் வலம் வந்தும் வருகிறது தமிழ்மொழி. அந்த மொழியின் வளத்தை அறிய வேண்டுமானால், அகராதிகள்தான் அதற்கும் வழிவகுக்கும். கடந்த 18ம் நூற்றாண்டில் இத்தாலியில் இருந்து […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-3.html தம்பி ராஜேந்திரன் அரைக்கால் சட்டைப் போட்டிருந்த காலத்திலேயே எனது சுட்டுவிரலைப் பிடித்துக்கொண்டு அரசியலுக்கு வந்தவன். தம்பி ராஜேந்திரன் கழகத்தால் வளர்ந்தவன் அல்ல. இந்தக் கழகத்தை வளர்ப்பதற்காகத் தன்னையே ஒப்படைத்துவிட்டவன். தமிழகத்தில் ஏன் உலகத்திலேயே ஒரு நடிகர் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் என்ற பெருமையும் தம்பிக்கு உண்டு என்றார் அறிஞர் அண்ணா. தனது கனிந்த முகத்தால், கணீர் குரலால், காந்தச் […]

Read more

தீப்பற்றிய பாதங்கள்

தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர். நாகராஜ், தமிழில்-ராமாநுஜம், சென்னை, விலை 350ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-237-3.html டி.ஆர்.நாகராஜ் எனப்படும் தோட்டபள்ளப்பூர் ராமைய்யா நாகராஜ் என்ற இலக்கியக் கோட்பாட்டாளரை கன்னட எல்லை தாண்டி லேசாக அறியத் தொடங்கியபோது, அவர் தனது 44வது வயதில் இறந்தும் போனார். யு.ஆர்.அனந்த மூர்த்தியை துரோணாச்சாரியாராகவும் தன்னை அவருடைய சீடனாகவும் சொல்லிக்கொண்டவர். ஆதி சூத்திரர் என்றும் இடதுசாரி காந்தியவாதி என்றும் தன்னை அழைத்துக்கொண்டவர். அதற்காக அந்தக் கோட்பாட்டுக்குள் மட்டுமே தன்னை அடக்கிக்கொண்டவர் அல்ல. உனக்குத் தெரியுமா, மற்றொரு […]

Read more

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை 275ரூ. தமிழ்நாட்டு அரசியலை அப்படியே புரட்டிப் போடக் காரணமான ஊர் சேரன்மாதேவி. அந்த ஊரில் இருந்து செயல்பட்டு வந்த குருகுலத்தில் குறிப்பிட்ட நிகழ்வு மட்டும் நடக்காமல் போயிருக்குமானால், தமிழகத்தின் கடந்த முக்கால் நூற்றாண்டு வரலாற்றை கணிப்பதே சிரமமாக இருக்கும். காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரியார் வெளியேறாமல்கூட இருந்திருக்கலாம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளே உருவாகி இருக்காது. அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பற்றிய […]

Read more

என் பயணம்

என் பயணம், அசோக மித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-343-1.html அசோகமித்திரனுக்கு அறிமுகம் தேவை இல்லை. செறிவான உள்ளடக்கத்தை எளிமையாகக் காட்சிப்படுத்துவதன் மூலமாகத் தனது படைப்பைக் காலங்கள் கடந்தும் உயிரோட்டமாக வைத்திருக்கும் ஒரு சில எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர். அதைப்பற்றி அவர் அலட்டிக்கொள்வதில்லை என்பது மற்ற எழுத்தாளர்களில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டும். மனிதர்கள் நடுவில் இருக்கிறேன். நான் எழுதும் எழுத்தை நான் புரிந்துகொள்ளும் வகையில் புரிந்துகொண்டு வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் […]

Read more
1 2 3 4 5 9