இங்கே நிறுத்தக் கூடாது

இங்கே நிறுத்தக் கூடாது, அ.முத்துலிங்கம், நற்றிணை பதிப்பகம், பக்.128, விலை ரூ.150. நூலாசிரியரின் 12 சிறுகதைகளும் இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பு.மனைவியின் பெண்ட்லி காரை இரவல் வாங்கி பயணிக்கிறார் பரமேஸ்வரன். பூச்சு வேலை செய்யும் மூசாவை உடன் அழைத்துச் செல்கிறார். அவன் அகதி. இனிமேல் இழப்பதற்கு அவனிடம் ஒன்றுமே இல்லை. பலவிதமான துயரங்கள் நாலா பக்கமும் அழுத்தியபோதும் அவன் நிம்மதியாகத் தூங்கிவிடுகிறான். தன்னை மறந்து ஒரு குழந்தை போல உறங்கும் அவனைக் கண்டு வியந்து நிற்கிறார் பரமேஸ்வரன். இதுதான் நூலின் தலைப்பைக் கொண்டுள்ள […]

Read more

கூண்டுக்குள் பெண்கள்

கூண்டுக்குள் பெண்கள், விலாஸ் சாரங்; தமிழில்: ஆனந்த் ஸ்ரீனிவாசன், நற்றிணை பதிப்பகம், பக்.320, விலை ரூ.350. மராத்தி மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளரான விலாஸ் சாரங் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல கல்லூரிகளில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய  நூலாசிரியரின் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு நேரடித் தொடர்பில்லாத பல்வேறு அனுபவங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள  சிறுகதைகளில் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. கூண்டுக்குள் பெண்கள் சிறுகதை மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள வயதாகிக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணின் கதை. இக்கதை மூலம் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் சிரமம் […]

Read more

தம்மம் தந்தவன்

தம்மம் தந்தவன், விலாஸ் சாரங், தமிழில்: காளிப்ரஸாத், நற்றிணை பதிப்பகம், பக்.208, விலை ரூ.260. புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்த நாவல் மிக அற்புதமாக விவரிக்கிறது. புத்தர் தனது இளமைக்காலத்தில் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டது, அரண்மனைக்குள் சிறை வைக்கப்பட்டவராக இருந்தது, அதையும் […]

Read more

பறையொழிப்பின் தேவை

பறையொழிப்பின் தேவை, வல்லிசை, அழகிய பெரியவன், நற்றிணை பதிப்பகம், விலை 240ரூ. சுப்பிரமணி இரமேஷ் அழகிய பெரியவனின் இரண்டாவது நாவலான ‘வல்லிசை’, பறையொழிப்பின் தேவையை முன்னெடுக்கிறது. சாதிய அடையாளத்துடனே பார்க்கப்படும் பறை இசைக் கருவியானது சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்குத் தடையாக இருக்கிறது. அதனால், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் முதலில் பறை அடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கண்ணியைப் பிடித்துக்கொண்டு இந்நாவல் முன்னேறுகிறது. பறையுடன் தொடர்புடைய ஒரு சமூகத்தின் கசப்பான வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள உதவுகிறது. தலித்துகளுக்காகப் போராடிய அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா உள்ளிட்ட பல […]

Read more

அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார்

அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார், அழகிய பெரியவன், நற்றிணை பதிப்பகம், விலை 250ரூ. அன்புவழி அழகிய பெரியவன் 2011 வரை எழுதிய மொத்த கதைகளையும் தொகுத்து ‘அழகிய பெரியவன் கதைகள்’ வெளியான பிறகு, நீண்ட இடைவெளி கழித்து இப்போது புதிய கதைகளோடு இந்தத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. பொருளாதாரீதியில் பின்தங்கியும், கூடவே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியும் இருக்கும் குடும்பங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே துளிர்க்கும் அன்பைக் கோடிட்டுக் காட்டும் விதமாக இருக்கின்றன இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். இளம் தலைமுறையின் பாகுபாடற்ற மனப்பாங்கை வெளிப்படுத்தும் கதைகளோ மனிதத்தை விதைக்கின்றன. நன்றி: […]

Read more

கலாச்சார இந்து

கலாச்சார இந்து, ஜெயமோகன்,  நற்றிணை பதிப்பகம், பக்.176, விலை ரூ.200. இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் […]

Read more

உச்ச வழு

உச்ச வழு, ஜெயமோகன்,  நற்றிணை பதிப்பகம், பக். 176, விலை ரூ.200. நூலாசிரியர் கடந்த இரண்டாண்டுகளில் எழுதிய 10 புதிய சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகள் படிமங்களையும், உருவகங்களையும் பயன்படுத்திப் பேசுகின்றன. டாப்சிலிப் காட்டுக்குள் பழைய பங்களாவில் செல்லிட பேசியும் இல்லாது தனியாகத் தங்கும் இளைஞனை மையமாகக் கொண்டு நகரும் கதை. அம்மாவின் இறப்புக்குக் கூட நேரில் போக முடியாத கடந்த காலம் அடர்ந்த கானக கும்மிருட்டில் அவனுக்கு நினைவில் வருவது யதார்த்தம். பகல் முடியக் கூடாது என்பதற்காக விமானத்திலேயே பயணம் செய்து கொண்டிருக்கும் […]

Read more

சொல்லி முடியாதவை

சொல்லி முடியாதவை,  ஜெயமோகன், நற்றிணை பதிப்பகம்,  பக். 160, விலை ரூ.180. நூலாசிரியர் தன் நண்பர்கள், வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த 27 கட்டுரைகளின் தொகுப்பு. ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகளைக் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? கற்பு என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? காதலர் தினக் கொண்டாட்டம் தேவையா? தீபாவளி யாருடையது? உள்ளிட்ட பல கேள்விகள் இடம் பெற்றுள்ளன. நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறி கொண்டு தன் வாழ்க்கையைத் தானே […]

Read more

வாழ்ந்தவர் கெட்டால்

வாழ்ந்தவர் கெட்டால், க.நா. சுப்ரமண்யம், நற்றிணை பதிப்பகம், விலை 60ரூ. ‘எனக்கு 200, 600 பக்கங்கள் என்று நாவல்கள் எழுதுவதைவிட, சிறிய சிறிய நாவல்கள் எழுதுவதில் ஒரு அலாதியான திருப்தி’ என்று சொல்லும் க.நா.சு. எழுதிய, 75 பக்கங்களே கொண்ட நாவல் இது. நாவலின் பரப்பும், அதில் வலம்வரும் பாத்திரங்களும் நிகழ்வுகளும்கூட மிகக் குறைவு. ஆனாலும், நாவலை வாசிக்கும்போது வாசகன் பெறும் சுகமான அனுபவம் நம்மைப் பெரும் வியப்பிலாழ்த்துகிறது. கதைதக்களனில் புதிய உலகம், புதிய பாணி எனத் தொடர்ந்து தனது நாவல்களில் புதுமை படைத்துவந்த […]

Read more

நிழல் படம் நிஜப் படம்

நிழல் படம் நிஜப் படம்,  யுகன்,  நற்றிணை பதிப்பகம், பக். 167, விலை ரூ. 300. திரைப்பட ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட அரசியல் படங்களில் (கட்சி அரசியல் அல்ல) இருபத்தேழு படங்களைத் தேர்ந்தெடுத்து அவை பற்றி விரிவாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இத்தொகுப்பில் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களும், சில இந்திப் படங்களும், மிகக் குறைவான மலையாளப் படங்களும் இடம்பெற்றுள்ளன. (தமிழில் ஒன்றுகூடவா இல்லை?) தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகப் போராடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த நெல்சன் மண்டேலாவைப் பற்றிய ‘மண்டேலா – லாங் […]

Read more
1 2 3