பறையொழிப்பின் தேவை

பறையொழிப்பின் தேவை, வல்லிசை, அழகிய பெரியவன், நற்றிணை பதிப்பகம், விலை 240ரூ.

சுப்பிரமணி இரமேஷ்

அழகிய பெரியவனின் இரண்டாவது நாவலான ‘வல்லிசை’, பறையொழிப்பின் தேவையை முன்னெடுக்கிறது. சாதிய அடையாளத்துடனே பார்க்கப்படும் பறை இசைக் கருவியானது சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்குத் தடையாக இருக்கிறது.

அதனால், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் முதலில் பறை அடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கண்ணியைப் பிடித்துக்கொண்டு இந்நாவல் முன்னேறுகிறது. பறையுடன் தொடர்புடைய ஒரு சமூகத்தின் கசப்பான வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள உதவுகிறது. தலித்துகளுக்காகப் போராடிய அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா உள்ளிட்ட பல தலைவர்களின் செயல்பாடுகளும் கதையுடன் பயணிக்கின்றன.

திருவேங்கடம் என்ற கதாபாத்திரம் இச்சமூகம் உருவாக்கி வைத்துள்ள சாதியப் படிநிலைகளைத் தகர்க்கப் போராடுவதுதான் நாவலின் மையம்.

நன்றி: தமிழ் இந்து, 18/8/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *