வாழ்ந்தவர் கெட்டால்
வாழ்ந்தவர் கெட்டால், க.நா. சுப்ரமண்யம், நற்றிணை பதிப்பகம், விலை 60ரூ.
‘எனக்கு 200, 600 பக்கங்கள் என்று நாவல்கள் எழுதுவதைவிட, சிறிய சிறிய நாவல்கள் எழுதுவதில் ஒரு அலாதியான திருப்தி’ என்று சொல்லும் க.நா.சு. எழுதிய, 75 பக்கங்களே கொண்ட நாவல் இது.
நாவலின் பரப்பும், அதில் வலம்வரும் பாத்திரங்களும் நிகழ்வுகளும்கூட மிகக் குறைவு. ஆனாலும், நாவலை வாசிக்கும்போது வாசகன் பெறும் சுகமான அனுபவம் நம்மைப் பெரும் வியப்பிலாழ்த்துகிறது.
கதைதக்களனில் புதிய உலகம், புதிய பாணி எனத் தொடர்ந்து தனது நாவல்களில் புதுமை படைத்துவந்த க.நா.சு.வி.ன் பெயர் சொல்லும் நாவல்களில் இதுவும் ஒன்று.
நன்றி: தி இந்து, 9/9/2017.