கார்காலம்
கார்காலம், என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ.
மென்பொருள் வல்லுநராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்ட என். சொக்கன், திருமணத்துக்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட பயண அனுபவத்தையும் பிரிவின் வலிமையையும் விறுவிறுப்பான மொழிநடையில் எழுதியுள்ளார்.
எப்போதும் முகம் பார்த்தபடியே அருகிருக்கும் கணவன் – மனைவி இருவரில், யார் ஒருவரேனும் சற்றே பிரிந்து சென்று, மீண்டும் கூடுகையில் அன்பின் நெருக்கம் இன்னும் அதிகமாவது நிச்சயம்.
பயண நாட்களின் அனுபவங்களை நாட்குறிப்பில் எழுதுவதுபோல் பதிவுசெய்துள்ள இந்நாவல், வெளியூர் பயணம் முடிந்து கார்காலத்தில் வீடு திரும்பாதவர்களின் பிரிவின் வலியை மெல்லிய குரலில் சொல்கிறது.
நன்றி: தி இந்து, 9/9/2017.