எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான், தொகுப்பு ஷோபாசக்தி, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 140ரூ. ஈழம் பேசிப் பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப்படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமிழ் தேசியம் சார்ந்த ஆதரவு தளத்தில் இயங்கியவர்கள். புலிகள் இயக்கத்துடன் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள். பழ. ரிச்சர்ட், இடது சாரியாக அறியப்பட்டவர். […]

Read more

உலகத் தமிழ்க் கவிதைகள்

உலகத் தமிழ்க் கவிதைகள், தொகுப்பு செல்வா கனகநாயகம், விகடன் பிரசுரம், சென்னை, விலை 250ரூ. உலகத்தின் பரப்பையும் எல்லையையும் மற்ற மனிதர்களின் வாசனையையும் சிந்தனையையும் உணர்ந்து உள்வாங்குவதற்கு முன்பே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவன் தமிழன். அண்டிப் பிழைப்பது மட்டுமே புலவர்களின் இலக்கணமாக இருந்த காலத்தில் நீயோ மன்னன்? என்று கேள்வி கேட்கும் துணிச்சல் தமிழ்க் கவிதைக்கு இருந்தது. கலை கலைக்காகவே அழகியல் இல்லா இலக்கியம் அர்த்தமற்றது. கோஷம் போடுவதற்கும் கவிதைக்கும் வித்தியாசம் உண்டு மகனே என்றெல்லாம் விமர்சனப் புலிகள் தங்கள் […]

Read more

முதல் விடுதலைப் போர்

முதல் விடுதலைப் போர், முனைவர் கே.ராஜய்யன், கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ், ஜே. கோர்லே, தமிழில் பொன்.சின்னத்தம்பி முருகேசன், நா. தர்மராஜன், பதிப்பாசிரியர் சின்னமருது தீனதயாளபாண்டியன், காவியன் பவுண்டேஷன், மதுரை, விலை 500ரூ. ஐரோப்பிய மேலாதிக்கம் துடைத்தொழிக்கப்படப் போவதால், நாம் கண்ணிரற்ற நிலைத்த மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறோம் என்று 1801ம் ஆண்டு மருதுபாண்டியர்கள் பிரகடனம் செய்தார்கள். அதே ஆண்டு அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். ஆனால் 147 ஆண்டுகள் கழித்துத்தான் இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்தார்கள். மருது பாண்டியருக்கு முன்பும் பின்பும் மரணித்த தியாகிகள் தொகை அதிகம். […]

Read more

ரோமாபுரி யாத்திரை

ரோமாபுரி யாத்திரை, பாரேம்மாக்கல் கோவர்ணதோர், தமிழில் யூமா வாசுகி, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 380ரூ. இந்திய மொழியில் எழுதப்பட்ட முதலாவது பயணநூல் என்று சொல்லப்படுகிறது ரோமாபுரி யாத்திரை. மலையாளத்தில் எழுதப்பட்டதை 18ம் நூற்றாண்டின் நிழலில் நின்று இன்றைய நவீனத்தின் எல்லையைத் தொட்டு, தன் கவித்துவத் தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் யூமா வாசுகி. கிறிஸ்தவ தேவாலயங்கள், நிறுவனங்களுக்குள் இருக்கக்கூடிய அதிகாரப்பூசல்தான் இந்தப் புத்தகத்தின் அடித்தளம். மலங்கரைப் பிரதேசத்துக்குப் பாதிரியாராக தங்களது இனத்தைச் சேர்ந்த ஒருவரே வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் 1778ல் ஒரு குழு […]

Read more

அடிப்படை வாதங்களின் மோதல்

அடிப்படை வாதங்களின் மோதல், தாரிக் அலி, தமிழில் கி. ரமேஷ், பாரதி புத்தகாலயம், விலை 350ரூ. சிலுவைப்போர், ஜி.காத், நவீனத்துவம். மத அடிப்படைவாதத்துக்கும் உலக போலீஸ்காரனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் ஓர் ஏகாதிபத்திய அடிப்படைவாதத்துக்குமான மோதல்தான், கடந்த பல ஆண்டுகளாக உலகக் கொந்தளிப்பாக மாறிக்கொண்டு இருக்கிறது. எந்த ஒன்றின் பக்கம் நின்றும் ஆதரிக்க இயலாதவாறு இரண்டுமே கொடூரத்திலும் கொடூரமாக தங்களை அடையாளப்படுத்தி வரும் சூழலில் இரண்டையுமே எதிர்க்கவேண்டும் என்று வலுவான வாதங்களை வைக்கிறார் தாரிக் அலி. பிறப்பால் அவர் பாகிஸ்தானி. முஸ்லிம் அல்லாத முஸ்லிம் என்று […]

Read more

ஜுலியஸ் சீஸர்

ஜுலியஸ் சீஸர், எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, விலை 160ரூ. கிரேக்கத்தின் அலெக்சாண்டர், மங்கோலிய செங்கிஸ்கான், பிரெஞ்ச் நெப்போலியன், ரோமானிய ஜுலியஸ் சீஸர் ஆகியவை மறக்க முடியாத வீரப்பெயர்கள். இதில் சீஸர் பற்றியப் புத்தகம் இது. சீஸரை விலக்கிவிட்டு, வீரம் பற்றிப் பேச முடியாது. சீஸரை தவிர்த்துவிட்டு, பண்பு பற்றி பேச முடியாது. சீஸரை விட்டுவிட்டு வெற்றியின் சூட்சமங்களை ஆராய முடியாது என்ற கம்பீரத்துடன் இந்தப் புத்தகத்தை எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதியிருக்கிறார். சீஸரைப் பற்றி எழுதுவதாலேயே சொற்களும் கூர்மையாக இருக்கின்றன. வரலாறு ஆர்வலர்களுக்கு அகஸ்ட்டஸ் சீஸர், […]

Read more

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு, ஜி. விஜயபத்மா, விகடன் பிரசுரம், பக். 175, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-233-6.html அணை பிறந்த கதை பென்னிகுயிக்-தமிழ்க் கடவுள். ஆக்கிரமிப்பாளராக இந்த நாட்டுக்குள் வந்து ஆபத்பாந்தவனாக மாறும் மனப்பக்குவம் ஒருசில மனிதர்களுக்கே வாய்க்கும். அப்படிப்பட்ட ஆளுமைகளில் ஒருவர் பென்னிகுயிக். பசி, பஞ்சம் தாண்டவம் ஆடிய காலத்தில், உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்காகத் தொடங்கப்பட்ட முல்லை பெரியாறு அணையின் கட்டுமானத்தை, பல்வேறு அதிகாரிகள் முடியாது என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விலகியபோது, எடுத்துச் செய்து கட்டி முடித்தது […]

Read more

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும், முருகப்பன். ஜெசி,இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம், விலை 200ரூ. சக மனிதனை ஓர் உயிராகக்கூட மதிக்காமல் நாகரிகச் சமூகமாக ஆகிக்கொண்டு இருக்கிறோம். சக மனிதனை எத்தகைய அநாகரிகமாக நடத்துகிறோம் என்பதை அம்பலப்படுத்தும் புத்தகம் இது. தீண்டாமை ஒழிப்புச் சட்டம், குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்று ஒவ்வொன்றாக உருவாக்கப்பட்டு 58 ஆண்டுகள் ஆன பிறகும் தீண்டாமை இருக்கிறது. வன்கொடுமை இருக்கிறது. பலாத்காரம் நடக்கிறது என்றால், வெறும் சட்டங்களால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதே […]

Read more

தலைப்பற்ற தாய்நிலம்

தலைப்பற்ற தாய்நிலம், மஞ்சுள வெடிவர்தன, தமிழில் ஃபஹீமா ஜஹான், எம். ரிஷான் ஷெரீப், நிகரி எழுநா வெளியீடு, சென்னை, விலை 50ரூ. கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து மனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று புத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து கவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து? என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன. இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். மேரி எனும் மரியா என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் […]

Read more

அடைபட்ட கதவுகளின் முன்னால்

அடைபட்ட கதவுகளின் முன்னால், மலையாளத்தில்-அனுசிரீ, தமிழில்-யூமா. வாசுகி, திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை, விலை 60ரூ. மகனுக்குத் தாலாட்டுப் பாடிய ஒரு தாயின் போர்ப் பாட்டு இது. எல்லாத் தாயும் தன் பிள்ளைகளை சில ஆண்டுகாலம்தான் சுமப்பார்கள். 24 ஆண்டுகளாகச் சிறையில் சுமக்கும் தாய் அற்புதம் அம்மாள். சிறையின் கொடும் தனிமையிலும் எனக்குப் போராடுவதற்கான சக்தி என் அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. வெயில் மழையைப் பொருட்படுத்தாது எனக்காக நீதிமன்றத்திலும் சிறையிலும் ஏறி தளரும் போதெல்லாம் ஒருக்கால் தூக்கு மரத்தின் கீழே நிற்க வேண்டி […]

Read more
1 2 3 4 5 6 9