நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன், நிழல் வெளியீடு, சென்னை, பக். 140, விலை 150ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023988.html நடிகர்களை விரும்பும் ரசிகர்கள் உண்டு. அதாவது விசிறிகளைச் சொல்கிறேன். ஆனால் நடிகரை விரும்பும் நடிகர் இருப்பது, அதாவது நடிகருக்கே ஒரு நடிகர் விசிறியாக இருப்பது ஆச்சர்யமானது. பாலையாவின் நடிப்பில் மயங்காத நடிகர்களே கிடையாது என்று சொன்னவர் சாதாரணமானவர் அல்ல. நாடகச் செம்மல் என்று புகழப்பட்ட அவ்வை டி.கே. சண்முகம். எவ்வளவு பெரிய நடிப்பு ஜாம்பவான்களுடன் […]

Read more

நிறங்களின் மொழி, நிறங்களின் உலகம்

நிறங்களின் மொழி, நிறங்களின் உலகம், மனோகர் தேவதாஸ், தேனி சீருடையான், விகடன் பிரசுரம், விலை 350ரூ. இந்தியாவும் விடுதலையும், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு என்று எழுதிக் குவித்த திரு.வி.க.வுக்கு முதுமையில் பார்வை லேசாக மங்க ஆரம்பித்தது. அதற்காக, எழுதிய கை சும்மா இருக்குமா? பார்வை குறைந்த பிறகுதான் இருளில் ஒளி படைத்தார். படைப்பாளிக்கு சிந்தனைதான் பார்வையே தவிர, கண் அல்ல. இதோ இரண்டு படைப்பாளிகள். ஒருவர் இருளில் அனுபவித்த வாழ்க்கையை வெளிச்சம் பெற்றதும் நாவல் ஆக்கி இருக்கிறார். […]

Read more

மகாபாரதம்

மகாபாரதம், பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ மகான்களும் மாபாவிகளும் வலம் வரும் காவியம் மகாபாரதம். வியாசன் வடித்தது. அதனுடைய கதைச் செழுமையால் அனைத்து மொழிகளாலும் அரவணைக்கப்பட்டது. வில்லிபுத்தூரார் பாடல்களாக வடித்தார் தமிழில். வசனமாக கொண்டுவந்து தந்தார் கும்பகோணம் ராமானுசாச்சாரியார். அதிலுள்ள அறத்தை சாறு பிழிந்து கொடுத்தார் நா. பார்த்தசாரதி. கதையை நாடக பாணியில் வர்ணித்தார் பழ. கருப்பையா. இதோ, பிரபஞ்சன் தன்னுடைய கதா ரசனைப்படி மகாபாரத மனிதர்களை நம் மனக்கண் முன் கொண்டுவந்துள்ளார். உலகத்தின் முதல் தன் வரலாற்றை வியாசரே எழுதியிருக்கிறார். […]

Read more

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 165ரூ. தமிழ்நிலத்தில் வேளாண் சிந்தனையை விதைத்தவர். தனது எண்ணங்களை வியாபாரப் பொருளாக மாற்றாதவர். பேச்சு வேறு, செயல் வேறு என வாழாதவர். மண்ணுக்குள் புதையும் வரை சொன்ன சொல்லுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர், பசுமைப் போராளி நம்மாழ்வார். சிலர் பேசுவார்கள். செயல்பட மாட்டார்கள். சிலர் செயல்படவும் செய்வார்கள். தான் மட்டும் இயங்கினால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், நம்மாழ்வார் சிந்தித்தார், செயல்படுத்தினார். தன்னோடு சேர்ந்து ஏராளமானவர்களையும் செயல்பட வைத்தார். மறைவுக்குப் பிறகும் அவரது பச்சைத்துண்டு பசுமைப் […]

Read more

பழவேற்காடு முதல் நீரோடி வரை

பழவேற்காடு முதல் நீரோடி வரை, வறீதையா கான்ஸ்தந்தின், எதிர் வெளியீடு, விலை 130ரூ. என் விடலைப் பருவம் மீனவக் கிராமத்தின் வாசனை அடுக்குகளாக மனதில் பதிந்துகிடக்கிறது. மறக்க இயாத அருமையான வாழ்க்கை அது. காலண்டரில் தமிழ்/ஆங்கில மாதங்களை வரிசைப்படுத்துவதுபோல என் கடற்கரை வாழக்கையில் வருடத்தை மீன்வரவுகளின் பருவங்களாக வரிசைப்படுத்திவிட முடியும். சாளை, சாவாளை, குதிப்பு, சள்ளை மீன், அயிலை, நெத்திலி, கூனி, இறால், மரத்துமீன், கணவாய், கெழுது, கிளார்த்தி என்று எளிதாய்ப் பட்டியல்படுத்தலாம். ஒவ்வொரு மீனின் வருகையின்போதும் கடலோரம் புதுப்புது வாசனைகளை அணிந்துகொள்ளும். இதையெல்லாம் […]

Read more

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள், ம. இராஜேந்திரன், அடையாளம் வெளியீடு, விலை 180ரூ. தமிழகப் பழங்குடி மக்கள் தமிழ் மக்கள் சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கடமைப்பட்டுள்ளார்கள். அதில் முக்கியமானவர் மெக்கன்சி. கிழக்கிந்தியக் கம்பெனியில் தனது இளம் வயதில் வேலைக்குச் சேர்ந்த மெக்கன்சி, 1783ல் இந்தியாவுக்கு ஒரு பொறியாளராக வந்தார். அவருக்கு இங்கு நில அளவையாளர் பணி கிடைத்தது. 1818ல் இந்தியாவின் தலைமை நில அளவையாளர் ஆனார். இந்தியாவின் நீள அகலங்களை அளந்து நிர்வாகத்தை வடிவமைக்க வேண்டிய காலகட்டம் அது. வெறும் மண்ணைத் தேடிப் […]

Read more

வடகரை

வடகரை, ஒரு வம்சத்தின் வரலாறு, டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 400ரூ. ஒரு வம்சம், 600 ஆண்டு காலத்தில் எப்படியெல்லாம் துளிர்த்தும் துவம்சம் ஆகியும் உருமாறிக்கொண்டு இருந்தது என்பதைச் சொல்லும் வரலாறு இது. புனைவுகளில் மட்டும்தான் திடுக்கிடும் திருப்பங்களும் அலற வைக்கும் அழுகைகளும் நல்லது கூடிவரும்போது குலமே கெட்டுப்போகும் அளவுக்கு இழப்புகளும் இருக்க முடியுமா? இல்லை, உண்மை வரலாற்றிலும் இப்படி படிநிலை வளர்ச்சியைப் போல நடக்கும் அல்லவா? அப்படி ஒரு குடும்பத்துக்காரராக டாக்டர் மு. ராஜேந்திரன் இருக்கிறார். எங்கோ […]

Read more

இந்தியப் பயணக் கடிதங்கள்

இந்தியப் பயணக் கடிதங்கள், எலிஸா ஃபே, தமிழில் அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. பல்வகை இடர்கள், துன்பங்களுக்குப் பின் களிப்பூட்டும் நல் ஓய்வு அளிக்கும் இடமாக இந்த நகர் அமைந்திருக்கிறது. வசீகரிக்கும் அழகுடன் இந்த நகர் மிளிர்கிறது. வீடுகளும் பொதுக் கட்டடங்களும் பெரிதாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றன. இவை இத்தாலியில் இருக்கும் உணர்வை அளித்தன. தடையின்றி வழிந்தோடும் ஆடை அணிகலன்களின் விற்பனை. பகட்டையும் ஒய்யாரத்தையும் வெளிப்படுத்தும் பல்லக்குகள். அழகான கோச்சு வண்டிகள். எண்ணிக்கையற்ற வேலையாட்கள். பகட்டு நிறைந்த இலகுவான சொகுசான வாழ்க்கை. […]

Read more

பேசாத பேச்செல்லாம்

பேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி, விகடன் வெளியீடு, சென்னை, விலை 170ரூ.     To buy this Tamil book : https://www.nhm.in/shop/100-00-0002-459-6.html உனது எழுத்தை எனது மொழியில் நீயே எழுது – என்றார் கவிஞர் இன்குலாப். ஆண்கள், பெண் வேடமிட்டு எழுதிய எழுத்துகளில் கழிவிரக்கமும், உங்களுக்கு ஆதரவாக நான் என்ற வீண் ஜம்பமும்தான் வெளிப்பட்டது. இதையே பெரியார், பெண்களுக்காக ஆண் பாடுபடுவதாகச் சொல்வது எலிகளுக்காகப் பூனைகள் பாடுபடுவதாகச் சொல்வதைப்போல் என்றார். அடக்கப்பட்ட சமூகமே அவர்களது பிரச்னையை எழுத, பேச, போராடப் புறப்பட்டதுதான் […]

Read more

கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி,  விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. கற்க கசடற… கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது வள்ளுவர் காலம். கற்க கசடற கற்றபின் விற்க அதற்குத் தக என்பது கொள்ளையர் காலம். காலத்தை வெறும் கணக்காக மட்டுமல்லாமல், வளர்ச்சிக்குரியதாக மாற்றியது கல்வியும் அதனால் விளைந்த அறிவும்தான். அந்தக் கல்வியும் அறிவும் விலைபோன இந்தக் காலம்தான் மிகமிக மோசமானது. நாட்டின் குடிமகனுக்குக் கல்வியையும் சுகாதாரத்தையும் தருவதில் இருந்து ஓர் அரசாங்கம் என்று தவறியதோ, அன்றே மக்களைப் […]

Read more
1 2 3 4 9