ஆனைமலைக் காடர்கள்

ஆனைமலைக் காடர்கள், முனைவர் ஜே.ஆர். லட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், விலை 300ரூ. ஆனைமலைக் காடர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் குடில்களின் அமைப்பு, உணவுப் பழக்கங்கள், திருமணம் செய்யும் முறை, திருவிழா பற்றிய அனைத்துத் தகவல்களையும் இந்த நூலில் முனைவர் ஜே.ஆர். லட்சுமி பதிவு செய்துள்ளார். ‘இவர்களுக்கு கல்வியறிவு, இடஒதுக்கீடு பற்றியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்’ என்ற வேதனையையும் அவர் இதில் வெளிப்படுத்தி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

பெரியபுராணக் கதைகள்

பெரியபுராணக் கதைகள், ஆதிரையார், குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.150. சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த "திருத்தொண்டர் புராணம்' சிவனடியார்களான 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்களின் வரலாறுகளை விரித்துரைக்கும் புராணம். அதனால், அது பெரியபுராணமாயிற்று. சிவனடியார்களின் பெருமைகள், வரலாறுகள் மட்டும் இதில் கூறப்படவில்லை. மனித நேயம், உயிர்களிடத்தில் அன்பு, அன்னதானத்தின் சிறப்பு, சிவத்தொண்டின் மகிமை, திருநீற்றின் மேன்மை, அடியார்க்கு இரங்கும் பரமனின் எளிவந்த தன்மை, அம்மையப்பரின் கருணை, அறவுரைகள், மன்னர்களின் ஆட்சிமுறை, அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் நாகரிகம், பண்பாடு, கோயிற்கலைகள், வாணிகம், பொருளாதாரம், பழக்க வழக்கங்கள் […]

Read more
1 7 8 9