தேசியமும் திராவிடமும்

தேசியமும் திராவிடமும், துரை கருணா, எம்.ஜி.ஆர்., பாசறை, விலைரூ.300. தமிழகத்தில் தேசிய இயக்கத்தை பின்னுக்கு தள்ளி, திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்ற வரலாற்றை பதிவு செய்யும் நுால். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முகமாக, 39 கட்டுரைகள் உள்ளன. இந்தியாவில் விடுதலை இயக்கம் தோன்றி பரவியதுடன் துவங்குகிறது. அதில் தீவிரவாதியாக பங்கேற்ற, வ.உ.சி.,க்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. பின், நீதி கட்சியின் தோற்றம் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகிறது. தொடர்ந்து தமிழகத்தில் இயக்கங்களின் வளர்ச்சி, செயல்பாடு என்று பேசுகிறது. அரசியல் நிலையை, விமர்சனப்பார்வையுடன் […]

Read more

அகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள்

அகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள், ஏ.பிரகஸ்பதி, நர்மதா பதிப்பகம், விலைரூ.90 அகஸ்தியர் வெளியிட்ட நுட்பங்களை ஆராய்ந்து கன்னி ராசிக்காரர்களுக்குப் பொருந்தும் வகையில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 தலைப்புகளில் கன்னி ராசியில் அடங்கிய மூன்று நட்சத்திரப் பலன்களுக்கும் விளக்கம் உள்ளது. கன்னி ராசியும் அதன் சிறப்பு அம்சமும், நட்சத்திரப் பலன், கன்னி ராசியில் பிறந்த பெண்களின் பலன், கிரகங்களின் பொதுவான நட்பு, பகை, உறவு, நிலைகளின் விபரம், கன்னி லக்னமும், பிறந்த மாதப் பலன்களும் போன்ற தலைப்புகள், நாடி ஜோதிடக் […]

Read more

மகாபாரதத்தில் வரமும் சாபமும்

மகாபாரதத்தில் வரமும் சாபமும், இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. நுாற்றுக்கணக்கான கிளைக்கதைகளைக் கொண்டது மகாபாரதம். அந்த கதையில் வரும் பாத்திரங்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக வரம் கொடுப்பதும், சாபம் பெறுவதுமாக அமைந்துள்ளது. அது பற்றி விரிவாக உரைக்கும் நுால். மகாபாரதத்தில் கிருஷ்ணர், காந்தாரியிடம் சாபம் பெற்று பிறவி பயனை முடிக்கிறார். பண்டு, அர்ஜுனன், யயாதி, பரீட்சித், ஜனமே ஐயன், அசுவத்தாமன் என, சாபம் பெற்ற கதாபாத்திரங்களாகவே உள்ளன. குந்தி, காந்தாரி, சஞ்சயன், கிருஷ்ணர், துருபதன் போன்ற பாத்திரங்கள் வரம் பெற்றவை. […]

Read more

அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 2

அந்தக் காலப் பக்கங்கள் – பாகம் 2, அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலைரூ.160. ஆனந்த போதினியும், ஆரணி குப்புசாமி முதலியாரும் என்ற முதல் கட்டுரையைப் படித்ததும் பத்திரிகை, துப்பறியும் நாவல் துறையில் ஆர்வம் உள்ளவர்களையும் இழுத்துப் பிடிக்கிறது. ஆய்வு நடையில் வெளிப்படுத்தாமல் வெகுஜன நடையில் வெளிப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் தமிழ் எழுத்துகள் எப்படி இருந்தன என்பதை அறிந்துகொள்ளும் வகையில் படமாகவும் தந்துள்ளார். அந்தக் கால தீபாவளிப் படங்கள் என்னும் கட்டுரையில், ஆர்யமாலா, மீரா, வித்யாபதி, ருக்மாங்கதன், கஞ்சன், கன்னிகா, ராஜா விக்கிரமா போன்ற […]

Read more

மகிழ்ச்சிச் சிறகுகள்

மகிழ்ச்சிச் சிறகுகள், முனைவர் இளசை சுந்தரம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.270 ‘தினமலர்’ நாளிதழில் வெளியான ‘என் பார்வை’ என்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். அண்மையில் மறைந்த எழுத்தாளர் இளசை சுந்தரத்தின் கடைசி நுால். முன்னுரையிலேயே ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை விதைக்கிறார். காலம் எனும் சிற்பி நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அதில் நாம் சிற்பமா… இல்லை சிதறி விழும் கற்களா? சிற்பமாக வேண்டுமானால் சாதனை செய்ய வேண்டும். பூமியை படுக்கையாக்குவதும், பாதையாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. […]

Read more

தமிழ் இந்தியா

தமிழ் இந்தியா, ந.சி.கந்தையா பிள்ளை, சங்கர் பதிப்பகம், விலைரூ.275 தமிழர்களின் நாகரிகம், இந்தியாவின் பழைய நில அமைப்பு பற்றிய புகழ் வாய்ந்த நுால்.சிந்து சமவெளியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் 1921ல் கண்டறியப்பட்டன. அங்கு கிடைத்த பழம் பொருள்களை ஆராய்ந்து, அங்கு வாழ்ந்தோர் தமிழர்கள் என்றும், அவர்கள் நாகரிகம், மெசபடோமியா எகிப்து பழைய நாகரிகங்களை ஒத்துள்ளது என்றும் பதிவு செய்துள்ளார். புத்தருக்குப் பின் இந்திய அரசாங்க அமைப்பு, தத்துவ சாஸ்திரிகள், பாடலிபுத்திரம் போன்றவை குறித்தும் சொல்கிறார். தமிழ்மொழியில் வெளிவராத பல அரிய செய்திகள் அடங்கிய கருத்துக் […]

Read more

திருவள்ளுவரும் திருமூலரும் – ஓர் ஒப்பீடு

திருவள்ளுவரும் திருமூலரும் – ஓர் ஒப்பீடு, பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100 திருவள்ளுவரையும் திருமூலரையும் ஒப்பிட்டு கருத்துக்களை பதிவு செய்துள்ள நுால். திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் இறைவன் சிவபெருமானின் பெருமைகள் சுட்டப்படுகின்றன. ஆனால், உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறள், இந்த வரையறைக்குள் அடங்காமல், ஒழுக்க நெறியைக் காட்டுகிறது. கருப்பொருள்கள் பொதுவாக இருப்பினும் கருத்துக்கள் சற்று மாறுபட்டுள்ளன. ஒரு ஆய்வு நோக்கில் திருக்குறள் மற்றும் திருமந்திரத்தில் உள்ள பொதுவான 20 தலைப்புகளில் ஆராய்ந்து, ஒத்த கருத்துக்களையும், மாறுபட்ட கருத்துக்களையும் தொகுத்து அளித்துள்ளார். திருக்குறள், […]

Read more

தங்கம் விலை தக்காளி விலை

தங்கம் விலை தக்காளி விலை, இராமன் முள்ளிப்பள்ளம், சஞ்சீவியார் பதிப்பகம், விலைரூ.70. வித்தியாசமான கருக்களை மையமாகக் கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 11 கதைகள் உள்ளன. விருப்பத்தை அமல்படுத்தும் வகையில், கற்பனையில் நிவர்த்திக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது. அவை, சமூகத்தின் இன்றைய தேவையை வலியுறுத்தும் வகையில் உள்ளன. தொகுப்பில் உள்ள முதல் கதை, அர்ச்சகர் பணி என்ற தலைப்பில் அமைந்தது. மிகவும் வித்தியாசமான கருவை அமைத்து எழுதியுள்ளார். வார்த்தைகளில் கடும் கோபம் தெறிக்கிறது. தொடர்ந்து புதிய யேசு, வெள்ளை நிறத்தொரு பூனை, சிதறு தேங்காய் […]

Read more

ரஸப் தய்யிப் எர்டோகன்

ரஸப் தய்யிப் எர்டோகன், கே.எம்.அஷ்ரப் கீழுபரம்பு, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலைரூ.170. துருக்கியின் தொன்மத்தையும், அரசியல் மாற்றங்களையும், ஆற்றல்மிகு ஆட்சியாளராக விளங்கிய ரஜப் தய்யின் எர்டோகன் ஆட்சித் திறனையும் விளக்கும் நுால். மதச்சார்பற்ற தன்மை என்ற பெயரில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு துருக்கியின் பண்பாடும் பாரம்பரியமும் குழிதோண்டி புதைக்கப்பட்டது. உஸ்மானிய ஆட்சியைக் கவிழ்த்து மேற்கத்திய பாணியிலான ஆட்சியைக் கொண்டு வருவோம் என முழங்கிய, முஸ்தபா கமால், இஸ்லாமியருக்கு எதிராக சட்டங்களை இயற்றியதை விரிவாக விளக்குகிறது. துருக்கியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும், ரஜப் தய்யிப் எர்டோகன் […]

Read more

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள்

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள், தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.550. பதினான்காவது மாடி, 7:30 மணி எக்ஸ்பிரஸ், உன் மனம் காயோ பழமோ?, உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர், பெண்ணை நம்பாதே என்ற தமிழ் நாவல்களின் தொகுப்பாக வெளிவந்துள்ள நுால். வடிவுடை நம்பி, கெண்டைவிழி என்ற பாத்திரங்களுடன் துவங்குகிறது பதினான்காவது மாடி. கொள்ளையை சாதாரணமாகச் செய்த வடிவுடைநம்பி, மீண்டும் ஒரு திருட்டில் ஈடுபட போலீஸ் கமிஷனர் கேட்பதில் மர்மம் துவங்குகிறது. இரண்டு பாத்திரங்களுடன் சாந்தோமில் துவங்குகிறது, 7:30 மணி எக்ஸ்பிரஸ் நாவல். பேரின்பத்திற்காக, மெரினா உணவகத்தில் […]

Read more
1 2 3 4 5 240