குறள் விருந்து கதை விருந்து

குறள் விருந்து கதை விருந்து, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.200. திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்திருக்கின்றன. திருக்குறளைப் படிக்கும் அனைவரின் மனதிலும் அது பதிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மருந்தின் கசப்பை நாக்கு ஏற்றுக் கொள்ள தேனைக் கலப்பது போல், நல்ல கருத்துகளை விதைக்க தேனான கதைகள் அவசியம் என நினைத்த நூலாசிரியர், திருக்குறளை ஒரு கதையுரையில் தந்தால் அது சிறக்கும் என்பதால், ஒரு குறளுக்கு ஒரு கதையை எழுதி விளக்கியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட 108 திருக்குறள்களுக்கு 108 கதைகளை எழுதித் தொகுத்துத் தந்திருக்கிறார். […]

Read more

உன்னுள் யுத்தம் செய்

உன்னுள் யுத்தம் செய், இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், விலை 180ரூ. ஐ.பி.எஸ். அதிகாரியான இரா.திருநாவுக்கரசு, சுய முன்னேற்றத்திற்குத் தேவையான கருத்துகளைக் கொண்ட 31 கட்டுரைகளை இந்த நூலில் தந்து இருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வது போல அமைத்து இருப்பதால் அவை, சுவையான சிறுகதைகளைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. மாணவர்கள் பரீட்சையை எதிர்கொள்வது எப்படி? வாழ்க்கையை எவ்வாறு சந்திப்பது? போன்ற பல வினாக்களுக்கு இந்த நூலில் விடைகள் தரப்பட்டுள்ளன. எளிமையான வாசகங்கள், யதார்த்தமான உரையாடல்களைக் கொண்டு இருப்பதால், இந்தக் கட்டுரைகளை எளிதாக […]

Read more

குறள் இனிது கதை இனிது

குறள் இனிது கதை இனிது, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், விலை 200ரூ. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பாலில் இருந்து 108 குறள்களைத் தேர்ந்தெடுத்த அவற்றின் பொருளை விளக்கும் வண்ணம் ஒரு பக்க கதைகளாக எழுதி இருக்கிறார் காவல்துறை அதிகாரியான ஆசிரியர். புராண இதிகாசம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரையிலான பல நிகழ்வுகளைப் படம்பிடித்து அவற்றை திருக்குறளுடன் ஒப்பிட்டு கதைகளை பின்னி இருப்பது படிக்க சுவாரசியமாகவும், பயன் அளிக்கும் வகையிலும் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more