சா.சோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்

சா.சோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், தமிழில் கவுரி கிருபானந்தன், சாகித்திய அகாடமி வெளியீடு, விலை 195ரூ. சா.சோ.எனப்படும் சாகண்டி சோமயாஜுலு என்ற தெலுங்கு எழுத்தாளர், அன்றாட வாழ்க்கையின் பொருளாதார பிரச்சனைகளை நன்றாக உள்வாங்கி அவற்றை சிறுகதைகளாக ஆக்கித் தந்து இருக்கிறார். எதற்கும் சமாதானம் செய்துகொண்டு போனால்தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதையும், மாற்றத்திற்கு ஏற்ப மனித எண்ணங்களும் சீர்பட வேண்டும் என்பதையும் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் வலியுறுத்துகின்றன. தேர்ந்தெடுத்து தரப்பட்ட 22 கதைகளும் ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்றாலும், அனைத்திலும் சமுதாய உணர்ச்சிகள் வெளிப்பட்டு […]

Read more

வெற்றி உங்களுடையதே

வெற்றி உங்களுடையதே, பி.வி.பட்டாபிராம்,  யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், பக்.308, விலை ரூ.250. வழக்கமாக வெளிவரும் சுயமுன்னேற்ற நூல்களிலிருந்து பெரிதும் வேறுபடும் நூல். சமுதாய நிகழ்வுகள் தனிமனிதனைப் பாதிக்கின்றன. அதையும் மீறி தனிமனிதன் முன்னேற வேண்டியிருக்கிறது. சமுதாயப் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிகளைச் செய்து கொண்டே, மனதளவில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளையும் நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறும் நூலாசிரியர், வழிகளாகத் தேர்வு செய்திருப்பது மனிதனின் மனதை மாற்றும் முயற்சிகளையே. மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? […]

Read more

தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள், தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி; சாகித்திய அகாதெமி, பக்.334; ரூ.290 துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, தி.செ.செள.ராஜன், சுத்தானந்த பாரதியார், ம.பொ.சிவஞானம், நெ.து. சுந்தர வடிவேலு, கலைஞர் மு.கருணாநிதி, த. ஜெயகாந்தன் ஆகிய 12 பேர் எழுதிய சுயசரித்திரங்களின் சிறப்பான பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுயசரித்திரங்களை எழுதியவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை அழகாக விவரித்துள்ளார் நூலாசிரியர். துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., […]

Read more

நடுகல்

நடுகல், தீபச்செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் இடையேயான ஈழத்தமிழர்களின் ஈரமான வாழ்வு, இனம் காக்கப் போராடிய மாவீரர்களின் வலிமை, வலி என்று அத்தனையையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் கதைக்களம். கதையின் நாயகனாக தீபச்செல்வன் தானே பயணித்திருப்பதை வரிக்குவரி உணரமுடிகிறது. சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகள், தோட்டாவிலும் குண்டுகளிலும் சிக்குண்டு வாழ்விடம் சின்னாபின்னமான நிலையிலும் உறவுகளின் ஒற்றைப் புகைப்படமாவது கிட்டாதா என்று தேடும் முள்ளிவாய்க்கால் மக்களின் ஏக்கம், இன்றாவது நிஜமாக விடியாதா என்ற எதிர்பார்ப்பு. போரற்ற மாற்றுப் போராட்டத்தின் […]

Read more

நிழலும் நிஜமும்

நிழலும் நிஜமும், ஜம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. சம்மரில் காமிக்ஸ் பிரியர்களைக் கூலாக்க வந்திருக்கும் ஜேம்ஸ்பாண்ட் 007 காமிக்ஸ். உளவாளிப் பெண் ஒருத்தியின் முகமூடி கலைந்துபோக, அவளைக் காப்பாற்ற வருகிறார் ஜே.பி. 007, அவரது வருகையும் தெரிந்துவிட, இரு நாட்டு உளவாளிகளுக்கு இடையே நடக்கும் உரசல்கள். இதற்கிடையே நாட்டில் ஆங்காங்கே நடக்கும் குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் யார் என்று கண்டுபிடிக்க, பாண்ட் செய்யும் உளவுப் பணிகள், பரபர சண்டைகள் என்று அதிரடியாக நகர்கிறது கதை. கிளைமாக்ஸில் வில்லன் யார் என்பது ரகசியம். […]

Read more

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும்

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும், க.சிவாஜி, அலைகள் வெளியீட்டகம், தொகுதி 1 – பக்.312; ரூ.200; தொகுதி 2 – பக்.344; ரூ.260; தொகுதி 3- பக்.368; ரூ.350. வேளாண்மையை முன்னேற்றம் அடையச் செய்ய விவசாயிகளுக்குக் கடன் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்; அதற்காக ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் வகையில் கடன் சங்கங்களைத் தொடங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம், 1904 – இல் கூட்டுறவுச் சட்டத்தை இயற்றி, கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்கியது. விவசாயிகள் மட்டுமல்லாமல், நெசவாளர், ஆலைப் பணியாளர் என […]

Read more

கண்ணன் எத்தனை கண்ணனடி

கண்ணன் எத்தனை கண்ணனடி, மாலதி சந்திரசேகரன், கைத்தடி பதிப்பகம், பக்.242, விலைரூ. 225. வித்தியாசமான நூல் இது. பகவான் கண்ணனின் லீலைகளை கண்ணனுடன் தொடர்புடையவர்கள் வாய் மொழியாக தெரிவிப்பதாக அமைந்துள்ளது. சுமார் 20 பாத்திரங்கள் கண்ணனின் லீலைகள் குறித்து பேசுகின்றன. குறிப்பாக, வசுதேவருக்கும் ரோஹிணிக்கும் மகனாகப் பிறந்த பலராமனின் பிறப்பு, அப்போது நடந்த சம்பவங்களை நந்தகோபன் கூறுகிறார். அடுத்ததாக, குழந்தை கிருஷ்ணர் மாம்பழம் விற்கும் கிழவியின் ஆசைப்படி, அவளை அம்மா என்றழைத்து மாம்பழம் பெற்ற லீலையை என்னவென்று சொல்வது? பகவானை வணங்கி நாம் ஓரடி […]

Read more

இறகென இருத்தல்

இறகென இருத்தல், செ.கார்த்திகா, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், விலை 60ரூ. மெல்லிறகாய் வருடி, கனமான பதிவுகளை மனதுக்குள் எழுதும் யதார்த்த கவிதைகள். குழந்தை முதல் தெய்வம் வரை, பாசம் முதல் நேசம் வரை அத்தனையும் இங்கே அவரவர் கனவுக்கும் கற்பனைக்கும் ஏற்ற நடையிலேயே நகர்வது நளினம். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தித்திக்கும் நினைவுகள்

தித்திக்கும் நினைவுகள், கலைமாமணி ஏ.ஆர்.எஸ்., ஏ.ஆர். சீனிவாசன், விலை 200ரூ. நாடக மேடையில் நாயகனாக இருந்து சினிமாவில் பிரவேசித்து அங்கும் முத்திரை பதித்தவர் ஏ.ஆர்.எஸ். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜி, நாகேஷ், சிவக்குமார் என்று திரையில் மின்னிய நட்சத்திரங்களின் திரைக்குப் பின்னாலான முகங்களை நேரில் கண்டிருக்கும் அவர், அவர்களுடனான அனுபவங்களை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார். அத்தனைக்கும் ஆதாரமாய்ப் புகைப்படங்களையும் தந்திருப்பது சிறப்பு. நாற்பதைக் கடந்தவர்களுக்கு அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்திடும். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

ஸ்ரீபாஷ்யம்

ஸ்ரீபாஷ்யம், (ஸ்ரீ ராமானுஜரின் பிரும்ம சூத்திர விளக்கவுரை), ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், விலை 600ரூ. பகவான் வேதவியாசர் அருளிய பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய பாஷ்யத்துக்கான விளக்கநூல். பிரும்மத்தில் இருந்தே உலகம் தோன்றியது என்பது முதல் அந்த பிரம்மம் யார்? பிரும்மத்தை அறிவதற்கும் அடைவதற்கும் வேதங்களும் வேதாந்தங்களும் சொல்லும் நெறிமுறைகள் என்னென்ன என்பதையெல்லாம் சாமான்யர்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகச் சொல்லியிருப்பது சிறப்பு. பகவானைக் காண பக்தர்களுக்குப் பாதை காட்டும் நூல். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 2 3 4 5 6