மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு, சுந்தரபுத்தன், பரிதிபதிப்பகம், விலை 150ரூ. மணம் வீசும் நினைவுகள் கண்ணையும் காதையும் திறந்துவைத்திருக்கிறவர் பத்திரிகையாளர் சுந்தரபுத்தன். சென்னையின் மஞ்சள் பூக்கள் நிறைந்த தெருக்களையும் கிராமத்தில் வெல்லம் அடைத்து சுட்டுத்தின்னும் தேங்காய்களையும் ஒரே நேரத்தில் எழுதுகிறவர். நகரவாழ்விலிருந்து கிராம வாழ்வின் ஏக்கங்களை, பெருமூச்சுகளை பதிவு செய்யும் இவரது எழுத்துகளில் ஏராளமான மனிதர்கள் வந்துபோகிறார்கள். பூவிற்கும் பெண்மணி முதல் நடிகர் சிவாஜிகணேசன் வரை எத்தனைபேர்? தன் தந்தையாரை என்ன மீசை எப்படி இருக்கே என்று நடிகர் சிவாஜிகணேசன் கூப்பிட்டதாக நினைவுகூரும் இவர் […]

Read more

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி

விடையபுரம் கடவுள் மறுப்பின் தொடக்கப்பள்ளி, சுந்தரபுத்தன், நடப்பு வெளியீடு, சென்னை, பக். 96, விலை 60ரூ. விடையபுரம் பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில்தான், தந்தை பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கைக்கான முழக்கத்தை முறைப்படி அறிவித்தார் என்கிறது இந்நூல். இப்பயிற்சிப் பள்ளியில் பெரியார் ஆற்றிய பேருரைகள் மற்றும் அவரது வேறு சில பேச்சுக்களின் தொகுப்பே இந்நூல். பெரியாரின் தொண்டரான ஒளிச்செங்கே தரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பெரியார் தொடர்பாக வேறு எங்கும் அறியமுடியாத பல தகவல்களும் பதிவுகளும் இடம்பெற்றிருப்பது இந்நூலின் சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: […]

Read more