மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு, சுந்தரபுத்தன், பரிதிபதிப்பகம், விலை 150ரூ.

மணம் வீசும் நினைவுகள்

கண்ணையும் காதையும் திறந்துவைத்திருக்கிறவர் பத்திரிகையாளர் சுந்தரபுத்தன். சென்னையின் மஞ்சள் பூக்கள் நிறைந்த தெருக்களையும் கிராமத்தில் வெல்லம் அடைத்து சுட்டுத்தின்னும் தேங்காய்களையும் ஒரே நேரத்தில் எழுதுகிறவர்.

நகரவாழ்விலிருந்து கிராம வாழ்வின் ஏக்கங்களை, பெருமூச்சுகளை பதிவு செய்யும் இவரது எழுத்துகளில் ஏராளமான மனிதர்கள் வந்துபோகிறார்கள். பூவிற்கும் பெண்மணி முதல் நடிகர் சிவாஜிகணேசன் வரை எத்தனைபேர்? தன் தந்தையாரை என்ன மீசை எப்படி இருக்கே என்று நடிகர் சிவாஜிகணேசன் கூப்பிட்டதாக நினைவுகூரும் இவர் அந்த சந்திப்பில் பார்த்த தினத்தந்தியின் முதல் பக்க செய்தியை நினைவில் வைத்திருந்து எழுதுகையில் அப்பாவின் பிள்ளையாக செய்தியாளர் ஆகிவிடுகிறார்.

இந்த நூலில் நுழைந்து வருகையில் கிராமமும் நகரமுமாக இரட்டை வாழ்க்கை வாழ்கிற ஒருவரின் நாள்குறிப்பை வெளிப்படையாக படித்த உணர்வு எழுகிறது.

நன்றி: அந்திமழை, 2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *