திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ், மு.பி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், விலை 200ரூ.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் எந்தவிதமான ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டது என்பது இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கிறது.

குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதில் திராவிட இயக்கம் ஆர்வத்துடன் ஈடுபட்டு இருக்கிறது என்பதை விளக்கி இருக்கும் ஆசிரியர், கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், சினிமா, மேடைப்பேச்சு, அறிவியல் போன்ற பல அம்சங்களில் திராவிட இயக்கம் தனது பங்களிப்பை செலுத்தியது எப்படி என்பதை ஆழமாகப் பதிவு செய்து இருக்கிறார்.

பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் கொடிகட்டிப் பறந்த சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்குப் பிறகும், தமிழ் மொழி வளமை குன்றாமல் வாழ்ந்து கொண்டு இருப்பதில திராவிட இயக்கத்தின் பங்கு என்ன என்பதும் நன்றாக விளக்கிக் கூறப்பட்டு இருக்கிறது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை முதலில் எதிர்த்த ம.பொ.சி., கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தலைவர்கள் பின்னர் மனம் மாறி, திராவிடர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டனர் என்ற வரலாற்று தகவலும் இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட இந்த நூல், திராவிட இயக்கத்தால் தமிழ் உணர்வு மங்காதது மட்டுமின்றி, தமிழ் இலக்கிய வளர்ச்சி தழைத்தது, செழித்து வளர்ந்தது என்பதையும் உறுதிபடத் தெரிவிக்கிறது.

நன்றி: தினத்தந்தி,19-2-20.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *