இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள்

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள், முனைவர் பங்காரு வேணுகோபால், வானதி பதிப்பகம்,வானதி பதிப்பகம், பக. 80, விலை 50ரூ. நாம் யார்? நம் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதையும், இன்றைக்கு இருக்கிற சட்டங்களோடு இந்திய கலாசாரப் பண்பாடு எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற கதைகளும், வரலாற்று இதிகாச புராணங்களும் எவ்வளவு மேன்மை பொருந்தியவை என்பதையும் கூறும் இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாடம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர்,2/12/18.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், முகிலை ராசபாண்டியன், முக்கடல், பக். 192, விலை 150ரூ. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது. பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர். சைவத்தை வளர்த்தால் […]

Read more

இளையராஜாவின் இசை பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள்

இளையராஜாவின் இசை பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள், மா.அமரேசன், அறம் பதிப்பகம், விலை 200ரூ. பிரபல இசையமைப்பாளர் இளைய ராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களில் புத்த சமயக்கோட்பாடுகள் பிரதி பலிக்கின்றன என்பதை தனது ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியர் மா.அமரேசன். இதற்கு இளைய ராஜாவின் பூர்வ பவுத்த இசைக் கூறுகளே காரணம் என்றும் விவரிக்கிறார். ஜனனி ஜனனி, ஆயிரம் தாமரை மொட்டுக்களே, என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் உள்ளிட்ட 8 பாடல்களை ஆசிரியர் விரிவான முறையில் ஒப்பீடும் செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

யூஏஏ எனும் ஆலமரம்

யூஏஏ எனும் ஆலமரம், டி.வி.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 90ரூ. நாடக திலகம் ஒய்.ஜி.மகேந்திரனின் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் நாடக குழுவினர் பற்றியும், அவர்கள் அரங்கேற்றி உள்ள நாடகங்கள் பற்றியும் பல்வேறு அரிய தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. நாடக ஆர்வலர்கள் ஒவ்வொருவரையும் படிக்க தூண்டும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027622.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

விளக்குகள் பல தந்த ஒளி

விளக்குகள் பல தந்த ஒளி, தமிழில் மொழி பெயர்த்தவர் பி.உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ. ஒரே நூலில் மனிதனின் மாபெரும் தூண்டுகோல் கருவூலத்தின் உன்னதமானவற்றை இது தருகிறது. இன்றையத் தேவைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள, கடந்த கால, நிகழ்கால, எல்லா காலத்திலும் பயன்தரும் சிந்தனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை இந்நூலில் காணலாம். ஆசிரியர் இந்நூலை தமிழில் சுவைபட மொழி பெயர்த்துள்ளார். அரிஸ்டாடில் முதல் எமர்சன் வரை, பிளாட்டோ முதல் வில்லியம் ஜேம்ஸ் வரை பலரது மிகச் சிறந்த எண்ணங்கள், தத்துவங்களின் சாரம், நம்மைத் தூண்டி விடவே […]

Read more

பரீட்சைக்குப் பயமேன்

பரீட்சைக்குப் பயமேன், நரேந்திர மோடி, தமிழாக்கம் வெ.இன்சுவை, அல்லயன்ஸ், விலை 150ரூ. தேர்வு என்னும் பண்டிகையில் பங்கேற்கும் வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தன், ‘மன்கீபாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் அளித்த சிறந்த விஷயங்களின் தொகுப்பாகும். மாணவ – மாணவியருடன் நேரிடையாக உரையாடும் வகையில் அமைந்த இக்கருத்துக்கள், 25 தலைப்புகளில், அதுவும், ‘மந்திரம்’ என்ற வகையில் தரப் பட்டிருக்கிறது. எப்போது பார்த்தாலும் படிப்பதை சற்று நிறுத்தி, ஓய்வுக்கு பின் படிக்கலாம் என்பது அதில் ஒன்று. உலகம் முழுவதும், ‘யோகா’ பரப்பிய பிரதமர் என்பதால், […]

Read more

ராமாநுஜர்

ராமாநுஜர், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 160ரூ. ராமானுஜரின் எண்ணங்கள் சம காலச் சிந்தனைக்கு மிகவும் பொருந்தி வரும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது இந்நாடகம். வைணவ நெறியைப் பாமரரும் அறியும் வண்ணம் அச்சமயத்தின்பால் மக்களைத் திருப்பியதில் ராமானுஜரின் பங்கு குறிப்பிடத்தக்து. அவர் வாழ்ந்த காலத்தில் அவரது அணுகுமுறை ஏழை எளியவரையும் சென்றடைந்தது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடப்பட்ட தருணத்தில் இந்நாடகம், இரண்டாவது பதிப்பாக வந்தாலும், இந்திரா பார்த்தசாரதியின் நாடக ஆக்கம், படிக்கத் துாண்டும் விதத்திலும், ராமானுஜரின் பணியைப் போற்றும் […]

Read more

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பு, சங்க காலத்தில் தமிழக மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது. தமிழ் மொழியும் தமிழ் நூல்களும் எந்த முறையில் சிறப்புப் பெற்று வளர்ந்தன என்பவை போன்றவற்றின் அரிய தகவல்களை இந்த நூல் தாங்கி இருக்கிறது. தமிழகத்தின் முற்கால, இடைக்கால, மற்றும் பிற்கால நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் ஆகியவற்றுடன் தற்கால புலவர்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம்பெற்று இருக்கின்றன. தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் மொழி ஆய்வு […]

Read more

தமிழ்த்திரை தந்த நகைச்சுவை நட்சத்திரங்கள்

தமிழ்த்திரை தந்த நகைச்சுவை நட்சத்திரங்கள், முத்து ரத்தினம், சரண் பதிப்பகம், விலை 90ரூ. தங்கள் நகைச்சுவை திறன் மூலம் அடுத்தவரை மகிழ்விப்போருக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் உண்டு. திரைத்துறையில் சாதித்த பல நகைச்சுவை கலைஞர்கள் கதாநாயகன் நாயகிக்கு இணையான புகழ் பெற்று விளங்கி உள்ளனர். அந்த வகையில் அந்றைய என்.எஸ்.கிருஷ்ணன் முதல் இன்றைய சந்தானம் வரை தமிழ் திரையுலகில் சாதித்த காமெடி நடிகர் நடிகைகளை பற்றிய நூல் இது. இன்றைய தலைமுறை அதிகம் அறியாத பழங்கால நகைச்சுவை நாயகர்கள் பற்றிய தகவல்கள் நூலுக்கு […]

Read more

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், ஆர்.எஸ்.நாராயணன், யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், விலை 120ரூ. நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம் என்றால், அதன் பெருமைக்குரிய அம்சமாக விளங்குவது நஞ்சில்லா வேளாண்மை, உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்காத அந்த இயற்கை விவசாயம் குறித்து பாடம் எடுக்கும் வகையில் அமைந்து இருக்கிறது இந்த நூல். விவசாயத்தில் விஷம் நுழையும் விதத்தை விளக்கி இருக்கிறார் ஆசிரியர். அதற்கான மாற்று வழிகளையும் எடுத்துரைத்து இருக்கிறார். மாடித்தோட்டம் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் தனது அனுபவங்களை அவர் விளக்கி இருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி: […]

Read more
1 2 3 4 8