விளக்குகள் பல தந்த ஒளி
விளக்குகள் பல தந்த ஒளி, தமிழில் மொழி பெயர்த்தவர் பி.உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ.
ஒரே நூலில் மனிதனின் மாபெரும் தூண்டுகோல் கருவூலத்தின் உன்னதமானவற்றை இது தருகிறது. இன்றையத் தேவைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள, கடந்த கால, நிகழ்கால, எல்லா காலத்திலும் பயன்தரும் சிந்தனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை இந்நூலில் காணலாம். ஆசிரியர் இந்நூலை தமிழில் சுவைபட மொழி பெயர்த்துள்ளார்.
அரிஸ்டாடில் முதல் எமர்சன் வரை, பிளாட்டோ முதல் வில்லியம் ஜேம்ஸ் வரை பலரது மிகச் சிறந்த எண்ணங்கள், தத்துவங்களின் சாரம், நம்மைத் தூண்டி விடவே இங்கு தரப்பட்டுள்ளது. படிப்பதற்கு ஒரு நோக்கமும், பிரச்சினையான நேரங்களில் சரியான சிந்தனையை தூண்டும் சிந்தனைகளும், நம்பிக்கையான, சந்தோஷமான வாழ்விற்கான ஆலோசனைகளும், நாம் எல்லோரும் தேடும் மன அமைதி, சமாதானத்தைத் தருவனவாக இந்நூல் இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 28/11/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000006122.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818