உள்ளங்கையில் ஐம்பது வானம்

உள்ளங்கையில் ஐம்பது வானம், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, பக் 168, விலை 150ரூ. கோவை புத்தகத் திருவிழாவில், பெண்கள் பங்கேற்று வாசித்தளித்த ஐம்பது கவிதைகளின் தொகுப்பு நுால். ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண் குரலாக வெளிப்படுகிறது. பெண் என்னும் பெருந்தவத்தின் மகிமைகளையும், வீறுணர்ச்சியின் வெளிப்பாட்டையும் ஆழமாக உணர்த்தும் கவிதைகள் அலங்கரிக்கின்றன. பெண்கள் எல்லாவித முன்னேற்றத்திற்கும், புரட்சிகர சிந்தனைக்கும் தயார்படுத்திக்கொள்ள வழிவகுக்கும்படியான கவிதைகள் வரவேற்புக்கு உரியன. – ராம.குருநாதன் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, விலை 110ரூ. கடல் வியப்பானது… பல அதிசயங்களை உள்ளடக்கியது. அந்தக் கடலைப்போலவே கவியரசனின் பாடல்களும் அர்த்தம் பொதிந்த ஆழமானவை, விளக்க விளக்க விரியும் அகலமானவை, தத்துவ முத்துகளை உள்ளடக்கி, வார்த்தை வண்ணங்களை வாரியிறைத்து மாயாஜாலம்போல் மலைக்கச் செய்பவை. கடல் பயணம்போல கண்ணதாசனின் பாடல்களை அனுபவித்து ரசித்து மகிழ, கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கருத்துப் பயணம். நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, பக்.136, விலை 110ரூ. மகாகவி பாரதிக்குப் பின், கடலில் மூழ்கி முத்தெடுத்த கவியரசரின் பாடல்களில், என்றென்றும் மக்களின் நெஞ்சத்தை விட்டு அகலாத கவித்துவத்தின் சிறப்பைச் சொல்கிறார், நுாலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி. ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, ஒருநாள் இரவு பகல்போல் நிலவு, தெய்வம் தந்த வீடு, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு, மயக்கமா? கலக்கமா? பரமசிவன் கழுத்திலிருந்து, வசந்தகால நதிகளிலே, நீரோடும் வைகையிலே’ உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், காலத்தால் அழியாத கருத்தாழம் மிக்க பொக்கிஷம் என […]

Read more

மனசில் பட்டதை

மனசில் பட்டதை, ஆண்டாள் பிரியதர்ஷினி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், 184, விலை 180ரூ. கடவுளை கடவுளாகப் பார்ப்பது ஒரு வகை. கடவுளை மனிதனாகப் பார்ப்பது இன்னொரு வகை. கடவுளை, தந்தை – தாயாக, தோழன் – தோழியாக பார்ப்பது என்ன வகை… எந்த வகையிலும் சேராத பந்த வகை. ‘எவ்வளவு பக்கத்தில் கடவுளை பார்க்க முடியும்… எவ்வளவு பக்குவத்தில் அவரை உணர முடியும்’ என, எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? உண்டு எனில், உங்கள் மனசுக்குள் நீங்கா ரீங்காரமிட காத்திருக்கும் ஆன்மிக வண்டு […]

Read more

பூவின் இதழ்கள்

பூவின் இதழ்கள், த.கணேசன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. 50 விதமான கட்டுரைகளின் தொகுப்புநூல். இந்நூலின் ஆசிரியர் த.கணேசன், வானொலியில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை உண்மைச் சம்பவங்களை, கட்டுரை வடிவில் தந்துள்ளார். 35 ஆண்டுகால வானொலி வாழ்க்கையில் அவர் சந்தித்த மாமனிதர்களையும், மனித நேய நிகழ்வுகளையும், சுவையோடு ஒவ்கொன்றையும் ஒரு சிறுகதைப் பாங்குடன் எழுதியுள்ளார். இக்கட்டுரைகளைப் படிக்கும்போது மானுடத்தின் பல்வேறு முகங்களையும் தரிசிக்க முடிகிறது. ஊடகத் துறையில் பணியாற்ற வேண்டும். பயிற்சி பெறவேண்டும் என்போர்க்கு இது ஒரு வழிகாட்டி நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more