பட்டினத்தார் தத்துவம்

பட்டினத்தார் தத்துவம், கு. பொன்மணிச்செல்வன், செந்தமிழ் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ.

காதறுந்த ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே என்ற ஞான வரிகளுக்கும், பட்டினத்தாருக்கும் உள்ள தொடர்பு தமிழகம் அறிந்தது. அத்தகைய சித்தர், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழநாட்டின் பெருநகரமாகவும், மிகப்பெரிய துறைமுகமாகவும் விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்தில், செல்வம் கொழிக்கும் முதன்மை வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருவெண்காடர்.

இவர் மாடமாளிகை, அயல்நாட்டு வணிகம், இன்பமான குடும்ப வாழ்க்கை, ஏராளமான பணியாளர்கள்… என்று செல்வச் செழிப்போடு வாழ்ந்தார். ஒருநாள் திடிரென அனைத்தையும் துறந்து, இடுப்பில் ஒரு முழத் துண்டோடு, சொந்த ஊரிலேயே சுற்றித் திரிந்து, பிச்சை எடுத்து உண்டு, தெருவில் உறங்கித் திரியும் துறவியாகிவிட்டார்.

இப்படியொரு நிலை அவருக்கு ஏற்பட யார் காரணம், என்ன நடந்தது, அவர் சித்தர் என்று அறியாத அவரது குடும்ப உறவினர்களே அவரை அவமதித்த விதம், அதன் விளைவாக அவர்களுக்கு நடந்த விபரீதம், அதன் பிறகு அவர்கள் அடைந்த மனமாற்றம், பட்டினத்தார் தன் தாயாரின் ஈமச் சடங்குகளை நிறைவேற்றிய அதிசயத்தக்க விதம், தான் சுற்றித் திரிந்த ஊர்களில் மக்களுக்கு அவர் புரிந்த அதிசயத்தக்க சேவைகள், நிகழ்த்திய அற்புதங்கள், இறுதியில் திருவொற்றியூர் கடற்கரையில் சிறுவர்களுடன், மறைந்து விளையாடும்போதே சிவலிங்கமாக மாறி சமாதி நிலை அடைந்தது, அதனால் அவருக்கு அங்க எழுப்பப்பட்ட கோவில்… இப்படி பட்டினத்தார் வாழ்க்கை வரலாறும், அவரது ஞானப் பாடல்களும், அதில் உள்ள தத்துவ விளக்கங்களும் எளிய தமிழ் நடையில், படிக்கத் தூண்டும் வகையில் இந்நூலில் பதியப்பட்டுள்ளன.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 10/7/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026789.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *