காலமெல்லாம் காத்தருளும் காஞ்சித்தலங்கள்
காலமெல்லாம் காத்தருளும் காஞ்சித்தலங்கள், கே.சாய்குமார், சாய் குமார் வெளியீடு, விலை 140ரூ.
புகழ்பெற்ற ஆயிரக்கணக்கான கோவில்களைக் கொண்டது காஞ்சிபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய மூன்று வட்டங்களில் உள்ள கோவில்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து இருக்கிறது.
மொத்தம் 355 சைவம் மற்றும் வைணவக் கோவில்களின் வரலாறு, அந்தக் கோவில்களுக்குச் செல்லும் வழி, அந்தக் கோவில்கள் திறந்து இருக்கும் நேரம், அங்கு தொடர்பு கொள்ள வேண்டியவரின் பெயர் மற்றும் தொலைபேசி விவரம் என்று பக்தர்களுக்குத் தேவையான அனைத்து பயன் உள்ள தகவல்களும் வரிசைக்கிரமப்படி தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
இவற்றில் பரிகாரம் செய்ய வேண்டிய கோவில்கள் எவை என்ற விவரமும் தரப்பட்டு இருக்கிறது. காஞ்சிபுரம் நகரில் ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் கோவில்கள் பற்றிய விவரமும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக்கொண்டு இருக்கும் அத்தி வரதரின் வரலாறும் பின் இணைப்பாகக் கொடுத்து இருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 10/7/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818