தூரங்களின் பாடல்

தூரங்களின் பாடல், மணல் உரையாடல், இசாக், தமிழ் அலை வெளியீடு, விலை: ரூ.150

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்து ஆயிரமாயிரம் இளைஞர்கள் சொந்த தேசத்தை விட்டு, தூர தேசம் சென்று உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வலி மிகு துயர வாழ்வை வார்த்தை வயல்களில் விதைத்திருக்கிறார் இசாக்.

துபாய் தேசத்துக்குச் சென்று நிமிடந்தோறும் நெஞ்சில் குடும்பத்தைச் சுமந்துகொண்டு, கண்ணின் நீருக்கு உள்ளுக்குள் தாழ்போட்டுக்கொள்ளும் நாட்களின் பாடல்தான் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கவிதைகள். ஏற்கெனவே வந்த ‘துணையிழந்தவளின் துயரம்’ சிற்சில மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது.

சம்பாத்தியம் புருஷ லட்சணம் என்று சொன்ன முதல் மனிதனின் எலும்புக்கூடுகள்கூடக் கிடைக்கலாம் ஒட்டகங்கள் தவழும் பாலை தேசத்தில். ஆம்! பொருளீட்டும் கனவுக்காகத் தர வேண்டிய விலை சாதாரணமானது அல்ல என்பதை ஒவ்வொரு கவிதையும் சொல்கிறது.

– மானா

நன்றி: தமிழ் இந்து, 2/11/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *