ஊர்சுற்றிப் புராணம்
ஊர்சுற்றிப் புராணம், ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.158, விலை ரூ.130. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் முதற்பதிப்பைக் கண்ட இந்நூல், அதன் சிறப்பு காரணமாக இப்போது ஆறாம் பதிப்பைக் கண்டுள்ளது. மனிதனின் அடிப்படை இயல்பே ஊர் சுற்றுவதுதான். இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர்சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான். புத்தர், மகாவீரர், சுவாமி தயானந்தர் உட்பட பலரும் ஊர்சுற்றிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஊர்சுற்றும் மனப்பான்மை மனிதனுக்கு இல்லாமலிருந்தால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உருவாகியிருக்காது. பல்வேறு கலாசாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் […]
Read more