என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள்
என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள், இயக்குநர் பேரரசு, கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.110.
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘;இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்39’ நூலை நினைவூட்டி, நம் கண்களை ஈரமாக்குகிறது இயக்குநர் பேரரசு எழுதியிருக்கும் இந்த நூல். நாட்டரசன் கோட்டையில் பிறந்த பேரரசுவுக்கு, சினிமாவில் உதவி இயக்குநராக வேண்டும் என்று ஆசை. அவரின் தந்தை கூறுகிறார்:
‘ஓராண்டு காலம் முயற்சி செய். வாய்ப்பு கிடைக்காவிட்டால் திரும்பி வந்துவிடு, வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப பாஸ்போர்ட் எடுத்து வைச்சிருக்கேன 39;39’ என்கிறார்.
இப்படியொரு நிபந்தனையோடு சென்னைக்கு வந்த பேரரசு, ராம.நாராயணனிடம் உதவி இயக்குநராக எப்படிச் சேர்ந்தார் என்பது விறுவிறுப்பான சிறுகதைபோல விவரிக்கப்படுகிறது. ‘ஆடிவெள்ளி 39’ படத்தில் குரங்கு சீறும் காட்சியைப் படமெடுக்க புரொடக்ஷன் அசிஸ்டென்டை நிறுத்தி வைத்த ராம.நாராயணனின் யுக்தி பாராட்டுக்குரியது. தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி திரைக்கதையின் மேல் வைக்கும் நம்பிக்கை, கவிஞர் வாலிக்கு இசையமைப்பாளர் பாடல் எழுதக் கொடுத்த மெட்டுக்கு, தான் பாட்டெழுத பேரரசு பெற்ற பயிற்சிகள், பேரரசு பெற்ற வெற்றிகள், மணிரத்னம் தயாரித்த படத்துக்கு வசனம் எழுதக் கிடைத்த வாய்ப்பும், அதற்கு மனோபாலா சொன்ன நன்றியும், கே.பாலசந்தர் தயாரிப்பில் படம் இயக்கும்போது அவரிடம் கதை சொல்லத் தயங்கியதும், வைரமுத்துவைப் பேட்டி எடுத்ததும், கிரகப் பிரவேசத்திற்கு வந்த பாரதிராஜா நெகிழ்ச்சி அடைந்ததும், நடிகர் ராஜேஷ் கட்டிய சமாதியும் அதற்கு அவர் கூறிய விளக்கமும் என ஒவ்வொரு பிரபலத்தின் பலத்தினையும் மெய்சிலிர்க்கும் எழுத்துக்களால் வடித்திருக்கிறார் நூலாசிரியர்.
மொத்தத்தில் 27 கட்டுரைகள் கொண்ட இந்த நூல் ஒரு நல்ல நாவல் வாசித்த அனுபவத்தைத் தருகிறது.
நன்றி: தினமணி, 12/6/2017.