தலைவலியே உன் முகவரிதான் என்ன?

தலைவலியே உன் முகவரிதான் என்ன?, அ.வேணி, சிவாவேணி பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.220.

மூளை நரம்பியல் நிபுணரான நூலாசிரியர், தலைவலி எதனால் வருகிறது? அதன் வகைகள் யாவை? தலைவலி வந்தால் எதைக் கவனிக்க வேண்டும்? தலைவலி பரம்பரை நோயா? தலைவலிக்கு என்னென்ன சிகிச்சைமுறைகள் உள்ளன? தலைவலி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? தலைவலியால் பாதிக்கப்பட்டவர் மருத்துவரிடம் என்ன சொல்ல வேண்டும்? என்பன போன்ற பல வினாக்களுக்கு இந்நூல் மூலம் விடையளிக்கிறார்.

உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை வலியின் மூலமாகத்தான் உடல் நமக்குத் தெரியப்படுத்துகிறது. எந்த எந்த உறுப்புகளில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டால் தலைவலி வரும் என்பது விளக்கப்பட்டுள்ளது.

தலைவலி எப்போது வருகிறது? எப்போது நீங்குகிறது? தொடர்ச்சியாக எவ்வளவு நேரம், எத்தனை நாட்கள் தலைவலி உள்ளது? எதைச் செய்தால் தலைவலி வருகிறது? எதைச் சாப்பிட்டால், எதை முகர்ந்தால், எதை அருந்தினால் தலைவலி வருகிறது? ஆகியவை உள்ளிட்ட தலைவலிக்கான அறிகுறிகளை வைத்தே அதனுடைய மூலத்தைக் கண்டறிய முடியும் என்பதை விளக்கும் நூலாசிரியர், தலைவலியைப் போக்குவதற்கான வழிமுறைகளையும் கூறியிருக்கிறார்.

ஒற்றைத்தலைவலிக்கான காரணங்கள், வலிப்பு நோய்க்கும் தலைவலிக்கும் உள்ள தொடர்பு, மூளை பாதிப்பால் ஏற்படும் தலைவலி, வைரஸால் உண்டாகும் தலைவலி, ஐம்புலன்களுக்கும் தலைவலிக்கும் உள்ள தொடர்பு, தலைவலியைத் தவிர்க்க செய்ய வேண்டியவை என தலைவலி தொடர்பான பல விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும்.”,

நன்றி: தினமணி, 2/9/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *