சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்ட்ரர்

சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்ட்ரர், வி.என்.சாமி, வி.என்.சாமி வெளியீடு, விலை ரூ.300

சௌராஷ்டிர சமூகத்தினர் தமிழகம் வந்த பிறகு எப்படி இங்கேயுள்ள சமூகப் பங்களிப்பில் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள் என்பதைப் பேசும் புத்தகம் இது. மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்புராமன், குடந்தை கே.கே.ராமாச்சாரி, யோகாசன நிபுணர் வி.என்.குமாரசாமி, வெங்கட்ராமையா, அஷ்டாவதானி பத்மநாபய்யர், பாலாஜி சொர்ணம்மாள், சோலை பாக்கியலட்சுமி அம்மாள், தாயம்மாள் இன்னும் இந்நூலில் வரும் பலருடைய வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை.

ராஜாஜியின் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைத் தினசரிக் குறிப்புகளாக எழுதிய டி.ஆர்.பத்மநாபன், அரிய வரலாற்றுப் பதிவுக்கு உதவியிருக்கிறார். சொந்தபந்தங்களோடு சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்டிரர்கள் ஈடுபட்டதைப் பதிவுசெய்திருக்கிறார் 90 வயதை எட்டிய முதுபெரும் பத்திரிகையாளர் வி.என்.சாமி. பெரியாரின் உதவியாளராகவும் ‘தமிழ்நாடு’, ‘சுதேசமித்திரன்’, ‘தினமணி’ நாளிதழ்களில் நிருபராகவும் பணியாற்றிய இவர் தமிழக அரசியல் வரலாற்றின் நேரடி சாட்சி.

இன்றைய இளம் பத்திரிகையாளர்கள் பின்பற்றத்தக்க முன்னோடி.

நன்றி: தமிழ் இந்து, 2/11/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *