ழ என்ற பாதையில் நடப்பவன்

ழ என்ற பாதையில் நடப்பவன், பெரு.விஷ்ணுகுமார், மணல்வீடு பதிப்பகம்,
விலை: ரூ.100

 

இல்லாத பாதையில் நடப்பவன்

 

ஒரு இளம் கவிஞரின் முதல் தொகுப்பு வெளியாகி, பரவலாகக் கவனம் பெற்று, குறுகிய காலகட்டத்துக்குள் மறுபதிப்பு காண்பதெல்லாம் நம் சமகாலச் சூழலில் அரிதாக நேரும் அற்புதம்தான். அப்படியான அதிசயம்தான் பெரு.விஷ்ணுகுமாரின் ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’. தோழியின் மல்லிகையை என்றும் வாடாமல் காக்கும் மனநிலையாகட்டும், புனையப்படும் கதைகளில் மூழ்கிக்கொண்டிருக்கும் மனிதர்களாகட்டும், பெருநகரத்துச் சிறுவன், விவஸ்தை கெட்ட நாணயங்கள், திறக்க முடியாத பூட்டைத் தொலைத்த சாவியாகட்டும்… இவையெல்லாம் வாழ்வின் ஞாபக மிச்சத்தை அப்புறப்படுத்திவிடாமல் இருக்க உதவுகின்றன.

கூரான பார்வையில் வெளிப்படும் அப்படியான கவிதைகளெல்லாம் பெருமூச்சுடனான ஏக்கத்தை உண்டாக்கிவிடுகின்றன. கவிதைகளில் இருக்கும் மாயத்தன்மையிலான கற்பனைகள் விஷ்ணுவுக்குத் தனித்துவமான மொழியைக் கொடுத்துவிடுகின்றன.

– ம.கண்ணம்மாள்

 

நன்றி: தமிழ் இந்து, 14/12/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *