மேதையையும் பேதையாக்கும் போதை
மேதையையும் பேதையாக்கும் போதை, முளங்குழி பா.இலாசர், குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், பக்.188, விலை ரூ.130.
போதைப் பழக்கத்தால் எவ்வளவு பெரிய மேதைகளும், வீரர்களும், தலைவர்களும் வீழ்ந்துவிடுவார்கள். எனவே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள் எனக் கூறும் நூல். போதைப் பழக்கத்தால் ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்களுடன் நூல் எடுத்துக் கூறுகிறது.
மகா அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், பாபர், ஹுமாயூன், சிவாஜியின் மகன் சாம்பாஜி, இராபர்ட் கிளைவ் உட்பட பலர் போர்களில் தோல்வி அடைந்ததற்கும் மரணமடைவதற்கும் காரணமாக போதைப் பழக்கமே இருந்திருக்கிறது. வின்ஸ்டன் சர்ச்சில் போதைப் பழக்கத்தால் நோய் வாய்ப்பட்டு மரணமடைந்தது, ரஷ்ய நாட்டின் தலைவராக இருந்த ஸ்டாலின் போதைப் பழக்கத்தால் பக்கவாத நோய் வந்து மரணமடைந்தது, நடிகை மர்லின்மன்றோ நெம்புடால் என்ற போதை மாத்திரைகளைச் சாப்பிட்டு அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது, தமிழ்த்திரையுலகில் கவிஞர்கள், நடிகர்கள், நடிகைகள் பலர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி பல துன்பங்களைச் சந்தித்தது என பல எடுத்துக்காட்டுகளுடன் போதைக்கெதிரான பாதையில் இந்நூல் பயணிக்கிறது.
அதுமட்டுமின்றி, போதைக்கு எதிராகப் போராடிய மனிதர்களைப் பற்றிய விரிவான தகவல்கள், போதைக்கெதிராக பல மதங்கள் கூறும் கருத்துகள், போதைப் பழக்கத்துக்கு எதிராக, அதில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகச் செயல்படும் அமைப்புகளைப் பற்றிய தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
நன்றி: தினமணி, 30/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818