பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்
பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும், இளங்கோ கிருஷ்ணன், புது எழுத்து வெளியீடு, விலை: ரூ.80
பிரக்ஞையும் தன்மிதப்பும்
இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதத் தொடங்கிய இளங்கோ கிருஷ்ணன், காத்திரமான கவிஞராகவும் விமர்சகராகவும் விளங்குபவர். கவிதை வாசகர்களிடையே பேசப்பட்ட தொகுதிகளான ‘காயசண்டிகை’, ‘பட்சியன் சரிதம்’ நூல்களை அடுத்து ‘பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்’ தொகுதியில் கவிதை வெளியீடு சார்ந்த சரளத்தை இளங்கோ கிருஷ்ணன் அநாயசமாக எட்டியுள்ளார். சத்தமான உரையாடலின் தொனியைக் கொண்ட இந்தக் கவிதைகளில் இளங்கோவின் குரல் கேட்கிறது. நகல் குரல்களும் போலிக் குரல்களும் பெருகியுள்ள நவீனக் கவிதைப் பரப்பில் சுயகுரல்களைக் கேட்பது அரிதான அனுபவமாக உள்ளது.
தர்க்கமும் தத்துவமும் அரசியலும் அன்றாட அனுபவங்களோடு மோதும் கவிதைகள் இவருடையவை. இரண்டாயிரம் வருட நீளமுள்ள பறவையான தமிழ்க் கவிதை மரபின் வாலை எழுதிக்கொண்டிருக்கும் பிரக்ஞை கொண்ட கவிஞன் என்ற போதம் இளங்கோவுக்கு இருக்கிறது. இந்தப் பிரக்ஞையும் தன்மிதப்பும் நல்ல கவிதைகள் பலவற்றையும், வெறுமனே தொழில்நுட்பமாகச் சரியும் கவிதைகளையும் சேர்த்தே தந்துள்ளன. ‘செருப்புகள்’, ‘மந்திரம்போல்’, ‘தோழர் புத்தர்’, ‘பச்சை அரவம்’ ஆகிய கவிதைகள் திரும்பத் திரும்ப வாசிப்பதற்கான அனுபவத்தை அளிக்கின்றன.
நன்றி: தமிழ் இந்து, 21/3/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818