எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க!

எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க!, ஜி.செல்வா, வாசகசாலை வெளியீடு, விலை: ரூ130

ஒரு போராளியின் பார்வை

விவசாயத்தைக் கைவிட்டு, கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களின் உழைப்பால் உருப்பெற்ற பெருநகரம் சென்னை. இயற்கைப் பேரிடர்களைச் சந்திப்பதற்குத் தயார்நிலையில் இல்லாத அரசு, ஆற்றங்கரைக் குடிசைகளை அகற்றி நகருக்கு வெளியே அவர்களை அப்புறப்படுத்திவிட்டது. ஆனால், சென்னைக்குள் ஓடும் ஆறுகளின் கரையோரங்களையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமிக்கும் பெருநிறுவனங்கள் சட்டபூர்வமான அனுமதியோடு இயங்கிவருகின்றன. குடிசைப்பகுதிகளை அகற்றுவதை எதிர்த்துப் போராட்டக்களத்தில் நிற்கும் ஜி.செல்வா, நகர்மயமாதலில் குடிசைவாசிகளின் பங்களிப்பை ஆதாரங்களோடு முன்வைத்து ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை அரசு அணுகிய விதம், பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகளுடனான பயண அனுபவங்கள் என்று கடந்த இரண்டாண்டுகளில் அவர் எழுதிய முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பு இது.

-புவி
நன்றி: தமிழ் இந்து, 30/3/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *