மதிப்பிற்குரிய மழலைகள்

மதிப்பிற்குரிய மழலைகள், வெற்றிச்செல்வி, ஸ்ரீ ஜோதி நியூஸ் மீடியா,  பக்.144, விலை ரூ.100.

குழந்தை வளர்ப்பு இப்போது சிக்கலான ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகளை இயல்பாக வளரவிடாமல் தடுக்கும் கல்விமுறை, செல்பேசி, தொலைக்காட்சி முதலான சமூக ஊடகங்களின் தாக்கம், வேலையின் காரணமாக குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க இயலாத பெற்றோர்கள் எனபல்வேறு சூழல்கள் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. இந்நிலையில், குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நூலாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.

பிறந்தது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளின் மன, அறிவு வளர்ச்சி நிலைகள் முதலில் விவரிக்கப்படுகின்றன.

குழந்தைகளைப் பெற்றோர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் கோபம், அடாவடித்தனம், தொடர் அழுகை, பயம், பொய் சொல்லுதல், பிற குழந்தைகளுடன் நட்போடு பழகாமை , விரல் சப்புதல் என எல்லாவற்றுக்கும் காரணங்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து முறையாக அவர்களை அணுகுவதே குழந்தை வளர்ப்பின் சரியான வழிமுறையாகும்.

குழந்தைகளைக் கட்டுப்பாடாக ஒழுங்குமுறையோடு வளர்ப்பதாக நினைத்து, பெற்றோர் செய்யும் செயல்கள், எவ்வாறு அதற்கு நேர்எதிரான விளைவுகளைத் தந்துவிடுகின்றன என்பதை மிக அருமையாக இந்நூல் விளக்குகிறது. மனநல ஆலோசகரான நூலாசிரியர், மிக ஆழமான உளவியல் சிந்தனைகளை மிக எளியமுறையில் விளக்கியிருப்பது சிறப்பு. பெற்றோர் அனைவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.

நன்றி:தினமணி, 22/7/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *