நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர் (அவ்வை டி.கே.சண்முகம்),  டி.கே.எஸ்.கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 248, விலை ரூ. 200.

நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகத்தின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு பரிமாணங்களில் சுவைபடத் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர்.

2012-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட அவ்வை சண்முகம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள், கலைஞர்களின் கருத்துகள் மற்றும் பத்திரிகைகளில் இடம் பெற்ற கருத்துகளை ஆண்டு வரிசைப்படி இந்நூல் தொகுத்தளித்திருப்பது சிறப்பு.

கொத்தமங்கலம் சுப்பு, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம், கி.வா.ஜகந்நாதன், வாலி போன்ற பல்வேறு கவிஞர்கள் அவ்வை சண்முகம் பற்றி எழுதிய கவிதைகள், நேருஜி, ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் எழுதிய கருத்துரைகள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன.

அவ்வையார் நாடகம் உருவானது குறித்து கலைவாணன் எழுதிய கட்டுரை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. மாமல்லர், ராஜேந்திரசோழன், முத்தையன், ஜெகதேவ், இளங்கோவடிகள் என பல்வேறு கதாபாத்திரங்களை மேடையில் உலவச் செய்தவர் டி.கே.சண்முகம். "சிவலீலா' நாடகத்தில் ஆறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

புராணம், சமூகம், சரித்திரம் என 74 மேடை நாடகங்களை அரங்கேற்றிய அவ்வை சண்முகம் இயக்குநர் ஸ்ரீதரை "ரத்தபாசம்' நாடகம் மூலம் கதாசிரியராக அறிமுகம் செய்தார். அண்ணாவின் "ஓர் இரவு' திரைப்படத்துக்கு அவ்வை சண்முகம் எழுதிய பாடல், அவ்வை சண்முகம் ஏற்று நடித்த நாடகங்களின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு என இந்நூல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

நன்றி: தினமணி, 28/5/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026753.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.