சாதனைச் செம்மல் ச.வே.சு
சாதனைச் செம்மல் ச.வே.சு, கமலவேலன்; மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலை ரூ.75;
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் வீரகேரள புதூரில் பிறந்தவர் ச.வே.சுப்பிரமணியன்.தமிழ் வளர்ச்சிக்குப் பலதுறைகளில், பலமுனைகளில், பல வழிகளில் தொண்டு செய்தவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்கு
நராய் அவர் ஆற்றிய பணிகள் ஏராளம்.
ஆராய்ச்சிக்கு ச.வே.சு. என்று திறனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டவர்.
ஆய்வடங்கலை முதன்முதலில் தோற்றுவித்தமை, இலக்கணத் தொகைகளை முதன்முதலில் உருவாக்கியமை, இலக்கியக் கொள்கைத் தொகுதிகளைப் படைத்தது, தமிழரின் மரபுச் செல்வம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றி ஆங்கிலத்தில் பல தொகுதிகளைக் கொண்டு வந்தது என ச.வே.சு.வின் சாதனைகள் ஏராளம்.
தமிழூர் என்ற ஊரை உருவாக்கிய பெருமைக்குரிய இவரின் நெறிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றோர் நாற்பதுக்கும் மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது. எண்பத்தொன்றில் எண்பத்தொன்று நூல்களைப் படைத்தளித்த தமிழறிஞர். ச.வே.சு.வின் சிறப்பைக் குன்றக் கூறாமலும், மிகைபடக் கூறாமலும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு வளம் சேர்க்கும் வகையில் இந்நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர்.
நன்றி: 3/6/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818