சுவடுகள் மறையாத பயணம்
சுவடுகள் மறையாத பயணம், பெ.சிதம்பரநாதன், பழனியப்பாபிரதர்ஸ், விலை 300ரூ.
வள்ளலாகிய அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா ஒரு மாமனிதர். அவருடன் நெருங்கிப் பழகும் பேறுபெற்ற சிதம்பரநாதன், அருட்செல்வரின் பல்வேறு முகங்களைப் பதிவுசெய்கிறார்.
வேளாண் உற்பத்தி, தொழில்மேம்பாடு, மொழிப்பிரச்னை, வெளியுறவுக்கொள்கை, உலகமயமாதல், இடஒதுக்கீடு, கல்விமறுமலர்ச்சி, மதச்சார்பின்மை, சமூகப்பிரச்னைகள், சமூகசேவை எனப் பல பிரச்னைகளுக்குத் தம்அறிவுத்திறனாலும், அனுபவத்தாலும், தொழில்நுட்பத்தாலும் காந்தியக்கொள்கை வழிநின்று தீர்வுகளைச்சொன்னவர் அருட்செல்வர். ஒரு மாபெரும் மனிதனின் பன்முகங்களைச் சொல்லும் மகத்தான நுால்.
நன்றி: தினமலர்
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029926_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818