எப்போ வருவாரோ

எப்போ வருவாரோ, தொகுப்பாசிரியர் வள்ளி முத்தையா, தோழமை வெளியீடு, பக். 112, விலை 150ரூ. எம்.எஸ்.சுப்புலட்சுமி சதாசிவம் தம்பதியருக்கு ரசிகமணி டி.கே.சி. எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்நூல். இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ரசிகமணி எழுதிய கடிதங்கள், ஒரு பல்சுவை விருந்து. பல தனிப்பட்ட சம்பவங்களை அவை கூறும்போது, சரித்திர நிகழ்வுகளாக அவை நிழலாடுகின்றன. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அவர் எழுதும் கடிதங்கள், “அருமைப் புதல்வி குஞ்சம்மாளுக்கு’ எனத் தொடங்குகின்றன. டி.சதாசிவத்துக்கு எழுதும் கடிதங்கள் “அருமை நண்பர் சதசாசிவத்துக்கு’ என்று தொடங்குகின்றன. கடிதங்களின் முடிவில் “அன்புள்ள, டி.கே.சிதம்பரநாதன்’ என்றே எழுதி […]

Read more