வியப்பூட்டும் வழிபாடுகள்
வியப்பூட்டும் வழிபாடுகள், பெ.பெரியார் மன்னன், விவேகா பதிப்பகம், விலைரூ.145
வித்தியாசமான 50 கோவில்கள் பற்றியும், அவற்றின் வழிபாட்டு முறை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்துள்ள இந்த நுாலில், அந்தச் சுவாமிகளின் படத்தையும் தெளிவான தகவல் கொண்ட நுால். இதில் இடம்பெற்றுள்ள கோவில்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாரத்தில் உள்ளவை.
கல்வராயன் மலையில் ராமனைக் கரியராமன் என்று குறிப்பிடுகின்றனர். கல்வெட்டையும் கடவுளாக வணங்குகின்றனர். அந்தக் கல்வெட்டை வணங்கினால் நோய் தீர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையும் இந்தப் பகுதியில் நிலவுகிறது.
ஓர் ஊரில் எட்டுக்கை அம்மன் சிலை 45 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள தன்மை முதலான அற்புதச் செய்திகள் பலவற்றையும் தொகுத்துத் தருகிறது இந்த நுால். நாட்டார் தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உள்ள அனைவரையும் கவரும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்
நன்றி: தினமலர், 16/1/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818