திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம், தி. பாஷ்ய ராநுசதாசன், யஷ்வந்த் பப்ளிக்கேஷன், பக்கங்கள் 80, விலை 60 ரூ.

ஸ்ரீமத் ராமாநுஜர் ஒரு சமயம், ஸ்ரீமதுரகவியாழ்வார் அவதாரம் செய்த திருக்கோளூர் அருகில் வருகிறார். எதிரே, ஒரு பெண்பிள்ளை, மூட்டை முடிச்சுகளோடு ஊரை விட்டு வெளியே வருவதைக் கண்ட ராமாநுஜர், அவளை யாரென்று விசாரிக்க, அவள் திருக்கோளூரிலிருந்து வருவதாகச் சொன்னாள். ‘எல்லாரும் புகும் ஊர் உனக்கு புறப்படும் ஊராயிற்றே’ என்று ராமாநுஜர் கேட்க, அவள்தான் எளியவள் என்று, எண்பத்தோரு விளக்கங்கள் சொல்கிறார். அந்த விளக்கங்களே படிக்கச் சுவையானவை. நம் மன மாசு நீக்கலாம். நூலின் மேலட்டையில், ‘திருக்கோளூர்’ என்பது திருக்கோயிலூர்’ என்று அச்சாகியிருப்பது படிப்போரைத் திகைக்க வைக்கும் என்பது உறுதி. அனைவரும் படிக்கலாம். – டாக்டர். கலியன் சம்பத்து. நன்றி: 26-ஆகஸ்ட்-2012, தினத்தந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *