மகாபாரதத்தில் வரமும் சாபமும்

மகாபாரதத்தில் வரமும் சாபமும், இ.எஸ். லலிதாமதி, கலைஞன் பதிப்பகம், பக். 176, விலை 165ரூ.

மகாபாரத பாத்திரங்களை நம் வாழ்வில் நடக்கும் நன்மை தீமை, நட்பு துரோகம் என அனைத்து செயல்களுக்கும் உதாரணம் காட்ட முடியும். அந்த வகையில் மகாபாரதத்தில் உள்ள சில பாத்திரங்கள் – யயாதி முதல் விஸ்வாமித்திரர் வரை – பெற்ற வரங்களையும் சாபங்களையும் எளிய நடையில் கதைபோல் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.

ஏன் சாபம்? எதற்காக சாபம்? என்பதன் விளக்கம் படிக்கும் மனிதர்களுக்கு ஒரு படிப்பினையைத் தந்து நீதியை போதிக்க் உதவும்.

நன்றி: குமுதம், 25/1/2017.

Leave a Reply

Your email address will not be published.