மரியா மாண்டிசோரியின் குடும்பத்தில் குழந்தை
மரியா மாண்டிசோரியின் குடும்பத்தில் குழந்தை, தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன்,முல்லை பதிப்பகம், பக்.112, விலை ரூ.90.
குழந்தைகளுக்கான வித்தியாசமான கற்பித்தல் முறையை உலகுக்கு அளித்த மரியா மாண்டிசோரி, இந்நூலில் குழந்தைகளைக் குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்; எப்படி அவர்களை நடத்த வேண்டும் என்று விளக்கியிருக்கிறார்.
குழந்தை தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கிறான் என்பது உண்மை. இதுவே ஆதாரமாக இருக்கும் தத்துவம். குழந்தை தன்னுடைய எண்ணங்களை வெளியிட விரும்பும்போது பிரத்யேகமான முறையில் செய்கிறான். அது அவனுடையதேயான முறை.
குழந்தைகளை தம்முடைய ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் பெரியோர் தங்கள் குறுக்கீட்டினால் ஒரு குருட்டுத்தனமான – காலத்திற்கு ஒவ்வாத அநாகரிக முறையில் குழந்தை தன் மிருதுவான மனதினை உருவாக்குவதை அழித்துவிடுகிறார்கள். இது போல தடுப்பது மகாபாவம் என்று கூறினால் தவறாகாது' என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
குழந்தைகளின் மனநிலை, வளர்ச்சி, கற்றுக் கொள்ளும் திறன், குழந்தையின் இயல்பான பழக்க, வழக்கங்கள் என அனைத்தையும் விளக்கும் இந்நூல், குழந்தை வளர்ப்பை அறிவியல்பூர்வமான ஒன்றாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. குழந்தைகள் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்.”
நன்றி: தினமணி, 31/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818