பெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு)
பெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு), விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், விலை 110ரூ.
பெருந்தலைவர், படிக்காத மேதை, பச்சைத் தமிழர், கர்ம வீரர், கறுப்பு காந்தி, கிங் மேக்கர் என்று மக்களால் மகிழ்வோடும், பெருமையோடும் அழைக்கப்பட்டவர் காமராஜர்.
தனக்கென எதையும் தேடாமல் ஏழை மக்களின் நல்வாழ்வு மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு இறுதி வரை ஏழைப் பங்காளனாக வாழ்ந்தவர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். சுதந்திரம் பெற்ற பிறகு 9 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு முன்மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டியவர்.
‘இன்றைக்கு காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்ற முழக்கம் கேட்கிறது. அத்தகைய சிறப்பான ஆட்சியைக் கொடுத்த காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூலில் விருதை ராஜா, எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 4/10/2017.