பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு, பேராசிரியர் தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், விலைரூ.120. பன்னிரு ஆழ்வார்களில், எம்பெருமானுக்குப் பொங்கும் பரிவு கொண்டு, பல்லாண்டு பாடியதால் விஷ்ணு சித்தர் – பெரியாழ்வார் என்று போற்றப்படுகிறார். ஆழ்வார்கள் இறைவனைத் தாயாகப் பாவித்து காக்க வேண்டி பாசுரங்கள் பாடினர்; ஆனால், பெரியாழ்வார் இறைவனுக்குத் தாமே தாயெனப் பாவித்து பாசுரங்கள் பாடினார் என்று கூறி, அவரின் ஆன்மிக சிந்தனைகளை விளக்கும் நுால். அறிவின் திறனுக்குச் சான்றுகளாக உள்ளன. செவ்விலக்கியம் படைப்போர் வழக்கு சொற்களையும், கொச்சை சொற்களையும் பயன்படுத்த மாட்டர் என்று கூறும் நுாலாசிரியர், […]

Read more

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு, தி.இராசகோபாலன்,  வானதி பதிப்பகம், பக்.200, விலை ரூ.120.  முதலாழ்வார்களுள் முதன்மையானவர் விஷ்ணுசித்தரான பெரியாழ்வார். இவர் ‘பெரிய திருவடி’யின் அம்சம். தாய்மையின் பெருமையைப் பிள்ளைத்தமிழ் மூலம் உலகுக்கு எடுத்துரைத்ததோடு, வளர்ப்பு மகளையும் (கோதை) ஆழ்வாராக்கிக் (ஆண்டாள்)காட்டியவர். முன்னோர் மொழியைப் போற்றுவதுடன், அவற்றை தம் படைப்பில் பல்வேறு இடங்களில் கையாண்டு வைணவத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர். மற்றைய ஆழ்வார்கள் பரமபக்தியினால் எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்துள்ளபோதிலும், அவர்கள் ‘பகவானுக்குக் குறையொன்றும் இல்லாதிருப்பதே நமக்கு மங்களம்’ என்று எண்ணிச் செய்துள்ளார்கள். ஆனால் விஷ்ணுசித்தரோ, சர்வ இரட்சகனையும் […]

Read more