சங்க இலக்கியங்களில் மனித நேயம்
சங்க இலக்கியங்களில் மனித நேயம், முனைவர் முருகையன் பக்கிரிசாமி, வனிதா பதிப்பகம், சென்னை – 17, பக்கம் 240, விலை 140 ரூ.
மனிதநேயம் என்றால் என்ன விலை என்று கேட்கும் இன்றைய சமுதாயத்தில், சங்க இலக்கிய மக்கள் எவ்வளவு மனித நேயத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார். அகத்தின் தூய்மை, புறத்தின் மேன்மை, அறத்தின் மாண்பு, உலகப் பொதுமைச் சிந்தனை, உயிரிரக்கப் பண்பு, மனிதமும் மானமும் என்கிற ஆறு தலைப்புகளில் மனிதநேயத்தின் மகத்துவத்தைப் புரியவைத்துவிடுகிறார். ‘உயிரிரக்கப் பண்பு’ என்கிற இயல்தான் நூலுக்கே மகுடமாகத் திகழ்கிறது. காதல், வீரம், அருள், இரக்கம், செல்வம், மனைமாட்சி, இன்பம், துன்பம், கல்வி, சான்றாண்மை, அறம், ஈகை, ஒழுக்கம், மானம், குறிக்கோள் என்று ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார். இந்நூலுக்கு நூலாசிரியர் பயன்படுத்தியிருக்கும் துணை நூல்களைப் பார்க்கும்போது ஒரு நூலகத்தையே புரட்டிப் போட்டிருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அரிய முயற்சி, அருமையான படைப்பு.