உணவே மருந்து
உணவே மருந்து, சீத்தலைச்சாத்தன், ஒப்பில்லான் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ.
நோய் தீர்க்கும் உணவுகள் பற்றி நம் முன்னோர்கள் சொன்னதை ஓலைச்சுவடிகளில் இருந்து தேடி எடுத்து தொகுத்துத் தந்துள்ளார். கூடவே பழைய நூல்களில் உள்ள பல மருத்துவக் குணம் உள்ள உணவுப்பொருட்கள் பற்றியும் தெரிவித்துள்ளது சிறப்பு.
நன்றி: குமுதம், 17/8/2016.
—-
செல்வச் சுரங்கத்தின் திறவுகோல், நெப்போலியன் ஹில், தமிழில் மு. சிவலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ.
இந்நூல் செல்வச் சுரங்கத்தின் அனைத்து கதவுகளையும் திறக்கும் திறவுகோலாக விளங்குகிறது. இங்கே செல்வம் என்பது பணம், சொத்து, சுகம் மட்டுமல்ல. அதற்கும் அப்பாற்பட்ட நோயற்ற வாழ்வு, தேழமைகூட செல்வம்தான் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
நன்றி: குமுதம், 17/8/2016.